திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல்
வசிகரப் பொய்கள்
அத்தியாயம் 21
குறும்படம் எடுக்க என்று சிகாமணியும்
நண்பர்களும் குழுமி யிருக்கிறார்கள். காமெரா வைத்திருப்பவன் தலையில் சிறு தொப்பி. அருகில்
கூலிங் கிளாஸ் போட்டபடி ஒருத்தன். கையில் பேடும், அதில் சில தாள்களும். அவன்தான் கதை
திரைக்கதை வசனம் இயக்கம் எல்லாம். தாளின் முதல் பக்கத்தில் பெரிசாய் அழகாய் எழுதியிருக்கிறது.
புதிய புனைப் பெயர். ராஜபாரதி.
“பாரதிராஜாவுக்குப் போட்டியா வன்ட்டான்டா
ஒருத்தன்“ என கூட்டத்தில் யாரோ கிண்டல்.
ராஜபாரதி எதோ யோசிக்கிறான். அவன்
முகம் மலர்கிறது. ஒரு வரியை சட்டென அடித்துப் புதுசாய் எழுதுகிறான்.
கூட்டத்தில் ஒருவன் “என்ன படம் சார்?“
என்று கேட்கிறான். “அட படம் கிடம் ஒண்ணும் இருக்காதுடா. எல்லாரும் தவறாமல் ஓட்டுப்
போடுங்கள் - அப்டின்றா மாதிரி துண்டுப் படமா இருக்கும். இதுங்க முகரைங்களைப் பார்த்தால்
படம் எடுக்கற முகரைங்களாட்டமா இருக்கு?“ என கூட்டத்தில் மற்றொருவன்.
இயக்குநர் ஆவேசமாய் “ஏன் சார் படம்
எடுக்கன்னு தனி முகரையா வாங்கி ஒட்ட வெச்சிக்க முடியும்?“ என்று கேட்கிறான்.
“இந்த டயலாக் நல்லா இருக்கு“ என அவனை
சிகாமணி போய் சமாதானப் படுத்துகிறான். “தேங்ஸ்“ என்றபடி அவன் திரும்ப தன் வேலைக்குப்
போகிறான்.
இயக்குநர் அருகில் ஒருத்தன் போகிறான்.
“என்ன கதை சார்?“
“இப்ப என் வேலையை விட்டுட்டு உன்கிட்ட
வந்து நான் கதை சொல்லணுமாய்யா?“ என திரும்பவும் கோபப்படுகிறான்.
அதற்குள் கூட்டத்தில் ஒருவன் தனியே
மேக்-அப் போட்டுக் கொண்டிருக்கும் நடிகையைக் காட்டி, “அதோ அந்தம்மாவை…“ அப்படியே திரும்பி
இன்னொரு பக்கம் நின்று கொண்டிருக்கும் ஆளைக் காட்டுகிறான். “இதோ இந்தத் தடியனாட்டம்
இருக்கிறானே… அவன்… கற்பழிக்கப் போறான்.“
ஐயய்ய நான் மாட்டேன், என வெட்கமாய்
மறுக்கிறான் தடியனாட்டம் இருக்கும் அவன்.
“அவன் ஏன் மேக்-அப் எதுவும் போடல்ல?“
“கழுத்துல கர்ச்சிப் எதும் கட்டி,
கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு மாதிரி மச்சம் கிச்சம் வைப்பாங்க. பாரேன்.“
அடுத்தவனின் கற்பனையில் அந்த மேக்-அப்புடன்
தடியனின் முகம் வருகிறது. “அட நல்லாதான்யா இருக்கு. பேசாம நீயே கதை எழுதலாம் அண்ணே.“
“யோவ் கதை உன் கதை இல்லய்யா. என்னிது…“
“இருந்தாலும் கற்பழிப்பு வேஷத்துக்கு
அந்த ஆள் சூப்பரா இருப்பான் சார்.“
சீச்சீ, என அவன் மேலும் வெட்கப் படுகிறான்.
“ஏய்யா அந்தம்மா பாரு. அவங்களே வெட்கப் படல்ல. பேசாம இருக்கு. இவரு கற்பழிக்கப் போறாராம்.
இவருக்குப் பாரு வெட்கத்தை…“
“கொஞ்சம் கம்னு இருய்யா. வேலை செய்யிற
மூடையே கெடுத்துருவாங்க போல…“ என இயக்குநர் கத்துகிறான். சற்று தள்ளிப் போய் சேரை இழுத்துப்
போட்டு உட்கார்கிறான்.
அறிமுகம் அற்ற நடிகை. சொந்தமாய் தன்
மேக்-அப் பெட்டி கொண்டு வந்திருக்கிறாள். மடியில் கண்ணாடி வைத்து குனிந்து அவளே மேக்-அப்
போட்டுக் கொண்டிருக்கிறாள். சுடிதார் அணிந்திருக்கிறாள்.
“கற்பழிப்புன்னா புடவை தான் அண்ணே
அம்சமா இருக்கும்…“
“டைரக்சன் மிஸ்டேக்.“
ஒரு உதவி இயக்குநர் அவளிடம் வருகிறான்.
“இரும்மா என்ன சீன்னு கேட்டுக்கோ. நீ பாட்டுக்கு பணக்கார வேஷம் போடறாப்ல இவ்ள எடுப்பா
ரெடியாகறியே?“
“அப்பிடியா? இப்ப என்ன பண்றது?“ என்று
அவள் திகைப்புடன் கேட்கிறாள்.
“கற்பழிச்சிட்டா மேக்-அப் எல்லாம்
கலைஞ்சிரும். அந்த சீனை முதல்ல எடுத்திறலாம்…“
“ஆமாண்டா. கற்பழிக்கு முன்னால மேக்-அப்
இருந்தால் தான் சீன் எடுபடும். முன்னாடியே பங்கரையா இருந்தால் எவன் கற்பழிப்பான்?“
இயக்குநர் திரும்ப முறைக்கிறான்.
“இல்லடா, இது ஓட்டுப் பொடுங்கள் தவறாமல்…ன்ற
துண்டுப் படம் தாண்டா. நான் போறேன்.“ ஒருவன் கிளம்புகிறான்.
“அன்னிக்கு ஒரு விளம்பரப் படம் பாத்தேண்டா.
குளிக்கிற சோப் விளம்பரம். குளிக்கிற சீனையே திரும்பத் திரும்ப எடுக்கறாங்க… பத்து
டேக் வாங்கிட்டது.“
“அந்தம்மா குளிச்சதே இல்லை போல…“
“கடேசில அந்தம்மாவுக்கு ஷுட்டிங்
முடிஞ்சி போறதுக்குள்ள ஜனதோஷமே பிடிச்சிட்டது.“
“டைரக்டருக்குத் தலைவலியே வந்திருக்குமே?“
“சார்… நல்ல ரிச் காஸ்ட்யூமா நீங்கதானே
கொண்டு வரச் சொன்னீங்க?“ என்று கேட்கிறாள் நடிகை ராஜபாரதியை.
“சரிதாம்மா.“
“அப்ப இந்த மேக்-அப் சரிதானா?“
“சரியாத்தான் இருக்கு.“
அப்பா… என அவள் நிம்மதியாக மீண்டும்
கண்ணாடி பார்த்துக் கொள்கிறாள். பக்கத்தில் இருக்கும் சிகாமணியிடம், “இந்தப் படத்துல
நடிக்கறதுக்காக புதுசா டிரஸ் எடுத்தேன் சார்“ என்கிறாள்.
“உங்க கலை ஆர்வத்தைப் பாராட்டறேன்“
என்கிறான் சிகாமணி.
“தேங்ஸ்“ என்கிறாள் அவள் மலர்ந்து.
“ஆனால் நடிக்கவும் செய்யணும். அது
இதைவிட முக்கியம்“ என்கிறான் சிகாமணி.
“இந்த அம்மாவை வெச்சிப் படம் எடுத்தால்
படம் ப்ரி வியூ தியேட்டர்லியே - விநியோகஸ்தர் காட்சியே நூறு நாள் போகும்டா…“ என்கிறான்
ஒருத்தன்.
ஒருவன் ராஜபாரதியிடம் வந்து “இந்தப்
படத்தின் கதை நீங்கதானா?“ என்று கேட்கிறான்.
“எஸ்.“
“திரைக்கதை?“
“நான்தான்.“
“வசனம்?“
“நானே.“
“இயக்கம்?“
“சாட்சாத் நானே…“ என அவன் பெருமையுடன்
நிமிர்ந்து சொல்கிறான்.
“அப்பன்னா… ஒண்ணு சொல்லவா?“
“சொல்லுங்க.“
“துட்டுச் செலவும் நீங்களே… சரிதானா?“
ராஜபாரதி முறைக்க அந்த நபர் நழுவுகிறான்.
சிகாமணி அருகே வருகிறான். “இப்ப என்ன
சீன் சார்?“
“ம். கதாநாயகி பெரிய பணக்காரி. கதாநாயகன்
ஏழை.“
“குடிசை வீட்டில் வசிக்கிற ஏழை.“
“அப்ப கற்பழிப்பு?“ என்று கூட்டத்தில்
குரல்.
அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல்
ராஜபாரதி தொடர்கிறான். “கதாநாயகனைத் தேடி கதாநாயகி அவன் குடிசைக்கே வருகிறாள்…“
“எங்கடா குடிசை?“ என கூட்டத்தில்
குரல்.
“அந்தா பாரு மாப்ளே. முன்னால மட்டும்
கூரை பின்னாடி மொழுக்கட்டின்னு கெடக்கே அதான் அவன் குடிசை…“
“பாவம்டா கதாநாயகன். அந்தக் குடிசை
கூட அவனுக்கு முழுசா இல்லை.“
“அவ்ள ஏழையா?“
“கதாநாயகனை விட தயாரிப்பாள்ர் ஏழை
போல இருக்குப்பா.“
“அவனைப் போய்க் கல்யாணம் பண்ணி இவ
என்ன பண்ணப் போறா?“
“அவங்க ரெண்டு பேருமே மொழுக்கட்டின்னு
கெடப்பாங்கடா.“
“ஐயோ இவங்களை கொஞ்சம் கம்னு இருக்கச்
சொல்லுங்களேன்…“
“எங்களுக்குத் தெரியாத கதையா அண்ணாச்சி.
எத்தனை படம் பார்த்திருப்போம்?“ என இளிக்கிறான் ஒருத்தன். அவனை சிகாமணி வாயைப் பொத்தும்படி
சைகை காட்டுகிறான். “நாங்க எல்லாரும் உங்க இடத்துக்கு சினிமா எடுக்க வந்திருக்கோம்.
நீங்க கண்டிப்பா ஒத்துழைப்பு கொடுக்கணும்.“
“செய்லாம் நைனா. உனக்கு என்ன வேணும்
ஒத்துழைப்பு. சொல்லு நீ…“ என ஒரு குடிகாரன் முன்னால் வருகிறான்.
அவரிடம் குனிந்து தோளைத் தொட்டு
“நீ கம்னு அங்கபோயி குந்திக்கிட்டு வேடிக்கை மாத்திரம் பாரு. அதான் நீ தர்ற ஒத்துழைப்பு“
என்கிறான் சிகாமணி.
ராஜபாரதியிடம் வருகிறான் சிகாமணி.
“சார் படம் எடுக்கும் போது அதுல கண்டிப்பா ஒரு நம்பகத்தன்மை கிடைக்கணும். யதார்த்தமா
இருக்கணும் படம். சும்மா ஆளுங்க இங்க அங்க நடமாடறா மாதிரி எடுக்கறதா திரைப்படம்? அது
நாடகம்…“
“கரீட்டு“ என்கிறான் குடிகாரன்.
“ஐயா…“ என இங்கிருந்தே வாயைப் பொத்துமாறு
காட்டுகிறான் சிகாமணி.
“ஒத்துழைப்பு… சரி சரி“ என்று தன்
வாயைத் தானே பொத்திக் கொள்கிறான் குடிகாரன்.
“இப்ப குடிசைன்னு ஒரு செட் மாதிரி
பண்ணீருக்கீங்க…“
பின்னாடி மொழுக்கட்டின்னு கெடக்கு…“
என கூட்டத்தில் முன்னால் பேசியவன்.
“குடிசைன்றதால சார்…“ என்கிறான் சிகாமணி
இயக்குநரிடம். “காட்சி இயற்கையா இருக்கணுமானால், ஒரு கோழி மாதிரி எதாவது… வாசல்ல… கதாநாயகி
நுழையுமுன்னால அது தொண்டை விரைக்க… ஒரு கொக்கரக்கோ..ன்னு கூவறா மாதிரி எடுத்தால், ரொம்ப
அம்சமா இருக்கும்.“
“இப்ப சேவலுக்கு எங்க போறது?“ என்கிறான்
ராஜபாரதி.
“எப்பிடியாவது கொண்டாருவோம். சீன்
நல்லா அமையணுமானால் இந்த மாதிரி கஷ்டம் எல்லாம் சகஜம் தான். ஒவ்வொரு இயக்குநரின் வெற்றிக்குப்
பின்னால் எவ்வளவு கடுமையான போராட்டங்கள் இருக்குன்னு… உங்களுக்குத் தெரியாதது இல்லை…“
என முடிக்கிறான் சிகாமணி.
“க…“ என ஆரம்பித்த குடிகாரன் அடங்கி
“ஒத்துழைப்பு“ என தன் வாயைத் தானே பொத்திக் கொள்கிறான்.
“நம்ம ஆளுங்க யார் வீட்டிலயாவது சேவல்
கிடைக்குமா?“ என்று கூட்டத்தைத் திரும்பிப் பார்க்கிறான் ராஜபாரதி. குடிகாரனைக் காட்டி
“இவங்க பக்கத்து வீட்ல சேவல் இருந்தது…“ என்கிறான்.
“இப்ப இருக்கா?“
“அதை இவன்தான் திருடி குழம்பு வெச்சிட்டான்.“
“வாங்க தோழர் பாக்கலாம்“ என ஒருவன்
கூட்டத்தில் இருந்து வருகிறான். ராஜபாரதி அவனுடன் போகிறான். “சிகாமணி நீங்களும் வாங்க“
என்று அவன் கூப்பிடுகிறான். “எதுக்கு நண்பா பத்து பேர்? எல்லாம் தோழர் பாத்து ஏற்பாடு
பண்ணித் தருவார்…“
“நான் புரட்சிகர கலைக் குழுவில் பாடல்லாம்
பாடுவேன் தோழர். சொந்தமாப் பாடல்களும் எழுதுவேன் தோழர். உங்க படத்தில் எனக்கு ஒரு பாடல்
எழுதவோ, முடிஞ்சால் பாடவோ வாய்ப்பு கிடைக்குமா தோழர்… வாய்ப்பு கிடைச்சால் பட்டுக்கோட்டையையே
மிஞ்சிருவேன் தோழர்.“
“பாட்டு கெடக்கட்டும். சேவல் கிடைக்குதா
பாப்பம் வாங்க“ என்கிறான் ராஜபாரதி.
அவர்கள் கிளம்பிப் போகிறார்கள். நடிகை
“என் மேக்-அப் கலைஞ்சிரும் போல…“ என்கிறாள் சிகாமணியைப் பார்த்து.
“பேய்ப்படம் எடுத்திற வேண்டிதான்“
என்று கூட்டத்தில் குரல்.
சிகாமணி மணி பார்க்கிறான். “போயி
பத்து பதினைஞ்சு நிமிஷம் ஆச்சி… இன்னும் கிடைக்கல்லியா சேவல்?“
“யோவ் சேவல் இல்லைன்னா இந்தக் காட்சி
எடுக்க முடியாதா? நீ வேற நல்லா இருந்த ஆளைக் குழப்பி விட்டுக் கூட அனுப்பிட்டியே?“
என ஒரு உதவி இயக்குநர் சிகாமணியிடம் கேட்கிறான்.
“அப்பிடில்லாம் ஏனோ தானோன்னு படம்
எடுத்தேன்னா கவுந்துரும் தம்பி. நீ இப்ப உதவி இயக்குநர் ஆதுக்குள்ள வேலை செய்ய அலுத்துக்கறே?“
“கரெக்ட்“ என்கிறான் குடிகாரன். கூட
இருப்பவன் அவனை சமாதானப் படுத்துகிறான்.
குடிகாரன் சிகாமணியைக் காட்டி “அந்தப்
பையன் கிட்ட விவரம் இருக்குப்பா“ என்கிறான். சிகாமணி பின் பக்கம் திரும்பவும், குடிகாரன்
வாயைத் தானே பொத்திக் கொள்கிறான்.
“தோழருக்கு பாட்டு சான்ஸ் குடுத்தால்
தான் சேவலைப் பிடிச்சிக் குடுப்பான் போலடா“ என்கிறான் ஒருத்தன். “அதோ வந்திட்டாங்கடா…“
என்கிறான் இன்னொருத்தன்.
தோழர் கையில் சேவல். ராஜபாரதியின்
வெள்ளைச் சட்டையில் இரத்தம். அவன் கையில் எதோ காயம். “என்னாச்சி?“ என எழுந்து ஓடி வருகிறான்
சிகாமணி. “என்ன ஓட்டம் ஓடுது…“ என்று கையில் வழியும் இரத்தத்தைத் துடைத்துக் கொள்கிறான்
ராஜபாரதி.
“சேவல் எங்கயும் கிடைக்கல்ல. ஒருத்தன்
கடைசியா தரேன்னான். வாடகையே 500 ரூபாய்.“
“பிராய்லர் உயிரோடவே அவ்வளவு விலை
பெறாதே அப்பா?“
“வாங்கிட்டு வந்தேன். வேற வழி…“
“வெரி குட்“ என்கிறான் சிகாமணி.
“சீன் பெர்ஃபக்டா வரணும் இல்லே.“
“தோழர் நம்மளை மறந்துறப்டாது…“ என்கிறான்
அந்தப் பாடகன்.
“எங்க ஒரு பாட்டு பாடிக் காட்டுங்க…ன்னு
அவர் இப்ப சொல்ல முடியாதுங்க. ஷுட்டிங் முடியட்டும்.“
அதற்குள் சேவலின் சொந்தக்காரக் கிழவன்
ஓடி வருகிறான். “பாத்து பூவா கையாளணும் அதை“ என்கிறான்.
“தூக்கித் தலையில வெச்சிக்கிர்றதாய்யா?
அதெல்லாம் நாங்க பாத்துக்கறோம்“ என்கிறான் ராஜபாரதி.
“பணம்?“
“அதெல்லாம் படப்பிடிப்பு முடிஞ்ச பிறகுதான்…“
“டாஸ் மாக் இருக்கும் தலைவா…“ என
கூட்டத்தில் யாரோ கிண்டல்.
“சேவலை விட்டால ஓடிரும். சீனை எப்பிடி
எடுக்கறது?“ என்று கேட்கிறான் உதவி இயக்குநர்.
““காலைக் கட்டிப் போடுங்க…“
“ஐயோ என் சேவல்…“ எனப் பதறுகிறான்
கிழவன்.
“நீயே கட்டிப் போட்டுத் தானேய்யா
வெச்சிருந்தே. இங்க வந்து சீன் போடறே…?“ என்கிறான் ராஜபாரதி.
“கட்டியிருந்த போதே நம்மைப் பார்த்ததும்
கட்ட அவுத்துகிட்டு அது ஓடிட்டது….“ என்கிறான் தோழமைப் பாடகன்.
“அதைப் பிடிக்கப் போயி என் சட்டையே
அழுக்காகி, கிழிஞ்சி, உடம்பே காயம் பட்டு…“
“காட்சி சிறப்பா அமைஞ்சால் எல்லாம்
தெரியாது“ என புன்னகை செய்கிறான் சிகாமணி.
“எதுக்கு இப்ப குறும்படம் எடுக்கறாங்க?“
“நாளைய இயக்குநர்-னு ஒரு தொலைக்காட்சிப்
போட்டிக்கு.“
“யார் நடுவர்?“
“அட யாரோ நேற்றைய இயக்குநர் இருப்பாரு…“
கட்டிய சேவல் இருப்பு கொள்ளாமல் தவிக்கிறது.
“அது பேசாமல் அடங்கினால் தான் படம் எடுக்க
முடியும்…“ என்கிறான் கேமெராமேன்.
“நேரமாவுது“ என்கிறான் ராஜபாரதி.
“இப்பவே பாதி நாள் போயிட்டது… செலவு வேற பட்ஜெட் தாண்டுது.“
“எத்தனையோ கஷ்டங்கள் தியாகங்கள் திரைக்குப்
பின்னால் இருக்குது“ என்கிறான் சிகாமணி.
“பேசாமல் மயக்க மருந்து மாதிரி கொடுத்துப்
படுக்க வெச்சிறலாமா?“
“ஐயோ என் சேவல்…“ என கிழவன் கத்துகிறான்.
“அது சரி வராது தோழர். அது குரல்
விரைக்க கொக் கொக் கொக்னு தொண்டையை விரித்து கொக்கரக்கொன்னு கூவணும். அப்பதான் காட்சி
சரியா வரும்…“
“அது புது ஆட்களைக் கண்டு பயப்படுது…“
என்கிறான் கிழவன்.
குடிகாரன் நாவில் அதைப் பார்த்ததும்
நீர் சொட்டிவிட்டது. “எந்த வீட்டுச் சேவல்ப்பா இது?“ என்கிறான் ஆசையுடன்.
சேவல் கொஞ்சம் அடங்கியதும், காமெராவை
அதன் பக்கம் கொண்டு போனாலே படபடன்று பொங்குகிறது. “ச். இப்பிடி இதை எடுத்தாலும் ஒண்ணுதான்,
எடுக்கா விட்டாலும் ஒண்ணுதான்…“
“சேவலே வேணாம்னு சொல்றலாமா?“
“அதெப்பிடி? எனக்குப் பணம் தரணும்…“
என்கிறான் கிழவன்.
“யோவ் இருப்பா. கொஞ்சம் காமெராவைப்
பார்க்கப் பழகிட்டது பாரு… இப்ப எடுக்கலாமா?“
சட்டென அதன் மேல் விளக்குகள் ஒளியைப்
பாய்ச்ச திரும்ப அது மேலும் ஆவேசமாய்ப் பதறித் துடிக்கிறது…
“சார் சேவலை அறுக்கறா மாதிரி ஆடியன்ஸ்
நினைச்சிக்குவாங்க சார்.“
“மணி ரெண்டு ஆயிட்டது சார். சாப்பாடு
முடிச்சி வேலையை ஆரம்பிக்கலாமா?“ என்கிறான் உதவி இயக்குநர்.
“இருய்யா இன்னும் ஒரு சீன் கூட எடுக்கவே
இல்லை. அதுக்குள்ள…“ என ராஜபாரதி கோபப்படுகிறான்.
“சேவல் அடங்காது சார். வேணாம். நாம
வேற சீன் எடுக்கறது நல்லது சார். இப்பவே மணி ரெண்டே கால்…“ என்கிறான் உதவி இயக்குநர்.
“சரி. அப்ப ஒரு ஆடு கீடு….“ என சிகாமணி
ஆரம்பிக்கிறான்.
“கரெக்ட்“ என்கிறான குடிகாரன். “அந்தாளு கிட்ட விஷயம் இருக்குதுப்பா.“
ராஜபாரதி சிகாமணியைக் கையெடுத்துக்
கும்பிடுகிறான். “நீங்க போயிட்டு வாங்க. என் படம். நான் எப்பிடியோ எடுத்துக்கறேன்…
இன்னிக்கு அரை நாள் போச்சி. மீதியாவது எனக்கு மிஞ்சட்டும்…“
“சார்… நான் என்ன சொல்ல வரேன்னால்…“
“நீ ஒண்ணும் சொல்ல வேணாம்…“
“கரெக்ட். இந்தாள் சொல்றதுலயும் நியாயம்
இருக்குப்பா“ என்கிறான் குடிகாரன்.
எல்லாருமே சிகாமணியைத் தனியே விட்டுவிட்டு
ஷுட்டிங்குக்குப் போகிறார்கள்.
லைட்… என்று சத்தம். சிகாமணி இருக்கும்
இடம் அப்படியே இருட்டு கவிகிறது.
அத்தியாயம் 22
வங்கி. பழைய காலம். வாசல் ஏ டி எம்
பிசியாக இருக்கிறது. பணம் எடுக்க நீள் வரிசை. அதை ஊடறுத்து மேனேஜர் கிருஷ்ணராஜ் ஸ்கூட்டரைச்
செலுத்தி உள்ளே போகிறார்., பின்சீட்டில் ராமசாமி. “போக வர வழி விட்டு இப்பிடி வரிசைகட்டி
நின்னீங்கன்னா நல்லது“ என்று செக்யூரிட்டி ஒதுக்கி நிற்க வைக்கிறான். பின் சீட்டில்
இருந்து ராமசாமி இறங்குகிறான். பேசிக் கொண்டே உள்ளே போகிறார்கள்.
“நல்ல வேளை. சரியான வேளையில இன்ஸ்பெக்ஷன்
போனம் சார். இல்லாட்டி பார்ட்டி நம்மைப் பூட்டு போட விட்டிருக்க மாட்டான்…“ என்கிறான்
ராமசாமி. “லோன் வாங்கும் போது நடையா நடக்கறாங்க. அப்பறம்னா வட்டி கூட கட்டறது இல்லை.
கேட்டால் எனக்கு அவனைத் தெரியும் இவனைத் தெரியும். நீங்க பண்றதைப் பண்ணுங்க. நானும்
என்ன பண்றீங்கன்னு பார்க்கறேன்... அப்டினு நம்மளையே மிரட்டறாங்க…“ என்கிறார் மேனேஜர்
கிருஷ்ணராஜ். அப்படியே வாட்டர் கூலரில் தண்ணீர் குடிக்கிறார்.
“பார்ட்டி கூல்டிரிங் சாப்பிடுங்க.
அது இதுன்னு என்னமாக் குழையறான். நாம கண்டுக்காமல் விட்டுட்டுப் போனால் பெரிய பெரிய
GIFT லாம் கூட தருவான்ப்பா“ என சிரிக்கிறார்.
தன் இருக்கையில் உட்கார்கிறான் ராமசாமி.
“அவனுங்க ஃபோன் பண்ணினா எடுக்க மாட்டாங்க. செல்லுல பேசினால் வெளியூர்ல இருக்கேன்னு
பொய் சொல்லுவாங்க. சொல்லாமல் கொள்ளாமல் குடோனைப் பூட்டிக்கிட்டுப் போயிருவாங்க. ஸ்டாக்கை
இடம் மாத்திருவாங்க… எல்லாம் நாம சமாளிக்கணு1ம். விரட்டி அவனைப் பிடிக்கறது நம்ம பொறுப்பு.
ஆனால் நாம அவனைப் பார்க்கப் போகணும்னால் பக்காவா நோட்டிஸ் கொடுத்து தான் போக வேண்டியிருக்கு
சார்.“
“எனக்கு முந்தி இருந்தாரே ஒரு மேனேஜர்
அவரு இவனை கொஞ்சம் தளர்வா விட்டுட்டார். அதான் எனக்கு கொஞ்ச்சம் சிரமமா இருக்கு.“
பியூன் ரத்தினம் அவரது ஹெல்மெட்டையும்
சூட்கேசையும் உள்ளே எடுத்துப் போய் அவர் அறையில் வைக்கிறான்.
“மகா? அப்சரா அன்ட கோ வந்து O D பணத்தைக்
கட்டிட்டானா?“ என்று கேட்டபடியே மேனேஜர் தன் அறைக்குப் போகிறார்.
“பேசினாங்க சார். பணத்தோட ஆளை அனுப்பிட்டாங்களாம்.
இப்ப வந்திருவாங்க சார்“ என்கிறாள் மகா. முழுக்க தாவரப் பச்சையில் இன்று மிளிர்கிறாள்
மகா லெட்சுமி. கண்ணின் மேல் இமைகளிலேயே லேசான பசு மஞ்சள் பூச்சு மினுங்குகிறது.
“கேட்டால் நீங்க எங்க O D போறீங்க,
நாங்க எங்க O D போறோம்னு வசனம் பேசுவாங்க…“ என்கிறான் ரமேஷ்.
ராமசாமி அவளைப் பார்த்துப் புன்னகை
செய்கிறான். “என்ன சார்?“ என அவளும் புன்னகைக்கிறாள்.
“வாழ்க்கையை என்னமாய்க் கொண்டாடறே
நீ?“
“கொண்டாடக் கூடாதா சார்?“
“நிச்சயம் கொண்டாட வேண்டிதான். வாழ்றதுன்றது
ஒரு முறை தானே?“
“வாழ்றது ரெண்டு முறைன்னால் கூட…“
என நிறுத்துகிறாள் மகா. “நான் ரெண்டு முறை கொண்டாடத் தயார் சார்.“
“சூப்பர்“ என்கிறான் ராமசாமி. “கவலையற்ற
வயசு உனக்கு. நேரா காலேஜ் முடிச்சே. வேலைக்கு வந்தாச்சி…“
“கவலைப் படணுமா சார்?“ என அவள் சிரிக்கிறாள்.
“ஐயோ வேணாம். நீ சிரிச்சிக்கிட்டே
இரு மகா. எங்களுக்காகவாவது…“
“சரி சார்…“ என்றவள் சிரித்து, “நான்
சந்தோஷமா இருக்கேன். அவ்ளதான் சார்… IT IS AS SIMPLY AS IT IS“ என்று கண் மலர்த்திச்
சிரிக்கிறாள்.
“இப்படிச் சொல்ல வாய்க்கிறதே ஒரு
வரம் தான்“ என்கிறான் ராமசாமி.
“இந்த பிரின்டர் கொஞ்சம் தகரார் பண்ணுது
சார். உள்ள பேப்பர் எதோ கிழிஞசி மாட்டிட்டிருக்கு போல…“ என்கிறாள் மகா.
ராமசாமி போய் பிரின்டரின் மேல் பக்கக்
கதவைத் திறந்து கேட்ரிட்ஜை வெளியே எடுக்கிறான். உள்ளே சிக்கியிருந்த காகிதத்தை நீக்குகிறான்.
திரும்ப கேட்ரிட்ஜை வைக்கிறான். திரும்ப அதை இயக்க ஸ்விட்சை ஆன் செய்கையில் அது ர்ர்ர்
என தன்னிலை மீள்கிறது.
“தேங்ஸ் சார்.“
“இட்ஸ் ஓகே.“
ராமசாமிக்கு போன் வருகிறது. ரமேஷ்தான்
எடுக்கிறான். “டேய் உனக்குதான்டா.“
“எனக்கா?“
“ஆமாம்.“
“யாரு?“
“உங்க அப்பா….“
“எனக்கு ஏதுடா அப்பா? அவர் போயச்
சேர்ந்திட்டாரே…“ என சிரிக்கிறான். பின் முகம் மாறி, “ஓ அப்பாவா…“ என பாய்ந்து போய்
எடுக்கிறான்.
“அப்பா? எப்பிடிப்பா இருக்கீங்க?“
“டேய் காலைல தான் வீட்லயிருந்து கிளம்பும்
போது பாத்துட்டுப் போனே… அதுக்குள்ள காத்துல கரைஞ்சிருவேனா?“ என்று அப்பாவின் கேலி
கேட்கிறது.
“இல்லப்பா. இல்லப்பா. இங்க வேலைல
ஒரு சின்ன குழப்பம். திடீர்னு உங்க குரலை போன்ல கேட்டது, ஒரு இதுவா ஆயிட்டதுப்பா.“
“ஒரு இதுவும் இல்லை. சேதி என்னன்னா…
நல்ல சேதிதான். நம்ம மாப்ளை பேசினார்.“
“யாரு மாது வீட்டுக்காரரா? என்னவாம்?
எதுவும் கம்பிளெயின்ட்டா…“
“அது பொதுவாச் சொல்றது. நீங்க ரொம்பச்
செல்லங் குடுத்து வளர்த்திட்டீங்க, அது இதும்பார். இம்முறை… நல்ல சேதி…“
“நான் GUESS பண்ணிட்டேன் அப்பா.“
“அதான். இதைக் கேட்க உங்க அம்மா இல்லியேன்னு
இருந்தது. சேதி கேட்டதும் உடனே உனக்குச் சொல்லலாம்னு தோணித்து.“
“அதுனாலதான் இத்தனை வருஷம் கழிச்சி
உங்க குரலை நான் கேட்க முடிஞ்சது அப்பா.“
“மணின்னு சொல்லு, வருஷம்னியே?“
“ரெண்டு வருஷம்.“
“இல்ல ரெண்டு மணி.“
“அப்பறமா அவன், மாதுவோட புருஷன்…
என்கூடப் பேசுவான். பேசலைன்னா மதியம் நான் கூப்பிட்டுப் பேசறேன் அப்பா. ஒரு மரியாதைக்கு
முதல்ல உங்ககிட்ட தகவல் சொல்லியிருக்கான்… நீங்க வேணா ஒரு நடை போயிப் பாத்திட்டு வரீங்களா
அப்பா?“
“வேணாம். வேணாம். அவனையே எதாவது வேலையா
இந்தப் பக்கம் வரும்போது கூட்டிட்டு வரச் சொல்லிச் சொல்லலாம்… அதான் மாசம் ஆனா வந்திட்டே
தானே இருக்கான்…“
“ஆனால் அந்தக் குழந்தையைப் பார்க்க
நீ இருப்பியாப்பா.“
“குழந்தையா? என்ன குழந்தைடா?“
“பெண் குழந்தை…“
“வழக்கம் போல விளையாட்டுப் பேச்சா
பேசறே? நான் எங்க போயிறப் போறேன்? முதல் பிரசவம் நாமதான் பார்த்து அனுப்பணும்…“
“கண்டிப்பா. கண்டிப்பா… சரிப்பா.
நான் வெச்சிர்றேன்…“
ரமேஷ் அவனையே பார்க்கிறான். “ஆ வூன்னா
உணர்ச்சி வசப் பட்டுர்றே நீ. இப்ப என்னாச்சி?“
“ஒண்ணில்ல.“
“சேதி நல்ல சேதி தானேடா?“
“ஆமாம். மாது… என் தங்கை உண்டாகி
யிருக்காளாம்.“
“அதுக்கு அழுவாங்களா?“
“அப்பா போன் பண்ணினார்…“
“சரிடா. அதுக்கு எதுக்கு அழறே?“
“என்னால இப்பிடி நிகழ்காலத்துக்கும்
இறந்த காலத்துக்கும் ஆடி ஓட முடியல்லடா. சில விஷயங்கள் ரொம்ப பிடிச்சிருக்கு. சிலது…“
“அழுகையா வருது.“
“விளக்கமா நீ சொல்றதே இல்லை. ஆனால்,
எப்பவாவது நீ விளக்கமாப் பேச ஆரம்பிச்சியானால்…“ என்கிறான் ரமேஷ். “அது புரியறது இல்லை.“
ராமசாமி தலையாட்டுகிறான். “எனக்கே
அது கஷ்டமா ஆயிருது.“
“உன்னோட வருஷக் குழப்பம் இன்னும்
தீரலியாடா?“
“தீர்ற மாதிரி இல்லை.“ அவன் எழுந்து
போகிறான். அவனையே புரியாமல் பார்க்கிறான் ரமேஷ்.
•
மதிய நேரம். ரமேஷ் நினைவு படுத்துகிறான்.
“மாப்ளை கூடப் பேசணும்னியே?“
“அவனே பேசிட்டான். டாக்டர் முன்னாடியே
கன்ஃபர்ம் பண்ணிட்டாராம். இருந்தாலும் சொல்றதுக்கு அவசரப் பட வேண்டாம்னு இருந்தானாம்…“
“அது கரெக்ட்டுதான். உடம்பு அவளுக்கு
நல்லபடியா ஒத்துழைக்கணுமே.“
கிருஷ்ணராஜ் சாப்பாட்டு அறைக்கு வருகிறார்.
“என்ன நம்ம கேர்ள்ஸ் ரெண்டு பேரையுமே காணம்?“
“எதோ சஸ்பென்ஸனு சொல்லிட்டு காணாமல்
போயிட்டாங்க…“
“என்ன சஸ்பென்ஸ்? ராமு உனக்குத் தெரியுமா?“
“அடிக்கடி கணக்கு உதைக்கிற சமயம்
சஸ்பென்ஸ் அக்கவுண்ட் அவனால தான் வருது“ என ரமேஷ் சிரிக்கிறான்.
“சும்மா இர்றா“ என்கிறான் ராமசாமி.
“தெரியாது சார்.“
அப்போது வாசலில் கலகலப்பு. ராதிகாவும்,
மகாவும் புத்தம் புதிய ஸ்கூட்டி பெப் வாகனத்தில் வந்து இறங்குகிறார்கள்.
எல்லாரும் வேகமாக வாசலுக்கு வருகிறார்கள்.
“மகா இதுதான் உன் சஸ்பென்சா?“ என
வருகிறான் ரமேஷ்.
“எஸ் ஆஃப் கோர்ஸ்“ என உடலை இப்படி
அப்படி ஆட்டிக் குதூகலிக்கிறாள் மகா.
“என்ன திடீர்னு?“ என்று கேட்கிறார்
மேனேஜர்.
மகா அமெரிக்கையாய்ச் சொல்கிறாள்.
‘’WHY SHOULD BOYS HAVE ALL THE FUN?’’
“NOT NECESSARILY OF COURSE“ என்கிறான்
ரமேஷ் சிரிப்புடன். “வாழ்த்துக்கள் மகா…“ என அவளிடம் கை குலுக்குகிறான். “ராதிகாவுக்கு
மட்டும்தான் சொன்னேன். நாங்க ரெண்டு பேரும் தான் போய் இந்த பச்சை கலர் வண்டியை மாடல்
ச்சூஸ் பண்ணினோம்.“
“எங்க ராமுவைக் காணம்?“
“சாப்பிட ஆரம்பிச்சிட்டனா?“
“அப்பதான் நாங்க சாப்பிடலாம்னு போனம்.
நீங்க வந்திட்டீங்க?“
“நல்ல நேரம் பார்த்து வண்டி டெலிவரி
எடுத்தோம்…“
மேனேஜர் ராதிகா மற்றும் மகா சிரித்துப்
பேசிக் கொண்டிருக்கிறார்கள். “இருங்க. இதோ வந்திட்டேன்…“ என ரமேஷ் உள்ளே போகிறான்.
அவன் முகம் மாறி யிருக்கிறது.
•
“ராமு?“ என்று கூப்பிடடபடியே உள்ளே
போகிறான்.
“வா“ என உள்ளே யிருந்து ராமுவின்
குரல்.
“என்னடா சேதி தெரியுமா?“
“என்ன?“
“நம்ம மகா…“ சிரிக்கிறான். “வண்டி
வாங்கியிருக்கா.“
“வாங்கிட்டாளா?“
“உனக்கு அதுல சநிதோஷம் இல்லியாடா?“
“சந்தோஷம் தான்.“
‘அதை சந்தோஷமா சொல்லலியே நீ. தோஷமாச்
சொல்லுறியே?“
“அப்பிடி யெல்லாம் ஒண்ணும் இல்ல.
நீ போயி மகா கிட்ட எதையாவது உளறி வைக்காதே…“
“சேச்சே…“ என்றவன் ராமசாமி கிட்டே
வந்து உட்கார்கிறான். “அவளைப் பத்திய விஷயத்தை நீ என்கிட்ட சொல்ல வேண்டிய நேரம் வந்திட்டதுன்னு
நினைக்கிறேன் ராமு.“
“அப்பிடியா?“
“இந்தபாரு. விளையாடாதே.“
“நான் விளையாடல்ல. சாப்பிட்டுக் கிட்டிருக்கேன்…“
என்றவன், எழுந்து கொள்கிறான். “சாப்பிடப் பிடிக்கல்ல…“
“அப்பன்னால்?“
“எதையாவது வீணா கற்பனை பண்ணிக்கிட்டு
அங்க போயி உளறி வைக்காதே காத்தவராயா?“
“கற்பனை பண்ணாதபடி உனக்கு என்ன தெரியுமோ
அதைச் சொல்லக் கூடாதா?“
மகாவும் ராதிகாவும் கலகலவென்று சிரித்தபடி
உள்ளே நுழைகிறார்கள்.
“சார் வண்டி வாங்கிட்டேன் சார். ஸ்கூட்டி
பெப்.“
“பச்சை கலர்…“
“உங்களுக்கு எப்படித் தெரியும்?“
“இன்னிக்கு வண்டி வாங்கியிருக்கே.
காலைல பச்சைக் கலர்ல டிரஸ் பண்ணியிருக்கே… SO LET ME GUESS IT THAT WAY…’’ சிரிக்கிறான்.
அவர்கள் உள்ளே நுழைய ராமசாமி வெளியே
போகிறான். ரமேஷும் கூட வருகிறான். “நீ சாப்பிடப் போகல்லியா ரமேஷ்?“
“அப்பறமா சாப்பிடறேன்…“
•
இருவரும் வாசலுக்கு வருகிறார்கள்.
வாசலில் புதிய வண்டி ஸ்கூட்டி பிளஸ். சந்தனம் குங்குமம் இட்டு செவ்வந்தி மாலை போட்டு…
“ஹா“ என பெருமுச்சு விடுகிறான் ராமசாமி.
அவனைப் பார்க்கத் திரும்புகிறான்.
“ரமேஷ்… ஐம் சீரியஸ். இப்ப நான் சொல்றதை
நீ நம்பணும்…“
“நம்பறது அப்பறம். ஆனால் தெரியும்…
யு ஆர் சீரியஸ்.“
“மகா வண்டி வாங்குவான்றது எனக்கு
அவள் இங்க வந்த நாள் அன்னிக்கே தெரியும்…“
“ம்.“
என்னவோ சொல்ல வந்தவன் அப்படியே நிறுத்துகிறான்.
அவன் மனசில் காட்சி ஓடுகிறது.
•
“இன்னிக்கு ’ஸ்ரீநிவாசோட அப்பா அம்மா
வர்றாங்க அன்க்கிள்…“ என உற்சாகமாக ராமசாமியிடம் சொல்கிறாள் மகா. ராமசாமி சிரித்தபடி
“மாமனார் மாமியாரை ஐஸ் வைக்கப் போறியா?“ என அவள் கன்னத்தில் தட்டுகிறான்.
“கொஞ்சம் நெர்வஸா தான் இருக்கு அன்க்கிள்…“
“என்ன எதுக்கு நெர்வஸ்?“
“அவங்க என்னை நேர்ல பாத்தது இல்லை.
ரெண்டு பேருமே லண்டன்லேர்ந்து வராங்க. இங்க ஸ்ரீநிவாசோட சித்தப்பா தான் எங்க அப்பா
அம்மாவைப் பார்த்துப் பேசி முடிச்சது…“
“அதுனால என்ன?“
“இல்ல. முதன் முதல்ல பார்க்கறோம்.
அவங்க கிட்ட எப்பிடி நடந்துக்கணும், எப்பிடிப் பேசணும்னு ஒண்ணும் தெரியல…“
“ஸ்ரீநிவாஸ் கூட வரல்லியா?“
“அவன் வரேன்னான். நாந்தான் நானே மேனேஜ்
பண்ணிக்கறேன்னு சொல்லிட்டேன்…“
“அதெல்லாம் ஜமாய்ச்சிருவே நீ…“ என
தட்டிக் கொடுக்கிறான் ராமசாமி.
ஸ்கூட்டி பிளஸ் உற்சாகமான குலுக்கலுடன்
கிளம்பிப் போகிறது. சாலைகளில் வேகத் தடைகளில் சீராகச் செல்கிறது. சிக்னல்களில் நின்று
கடக்கிறது. கூலிங் கிளாஸ் போட்ட மகா. ரோசா நிற உடைகளில் தேவதை போல. ஒரு திருப்பத்தில்…
சர்ர் சர்ர் என்று பிரேக்குகள் போடப் படுகிறான். கடைசியில் நிற்கிற காரில் இருந்து
யாரோ இறங்கி ஓடி வருகிறான். என்னாச்சி? என்னாச்சி? என்னாச்சி?... என குரல்கள்.
•
சட்டென முகத்தை மூடிக் கொள்கிறான்
ராமசாமி. “என்னால கற்பனையே பண்ணிப் பார்க்க முடியல்லேடா ரமேஷ்.“ உடம்பு குலுங்குகிறது
அழுகிறாப் போல. “நான்தான் அவளை வழியனுப்பி வெச்சேன் அன்னிக்கு…“
“சொல்ல வேணாம்“ என்கிறான் ரமேஷ்.
“இதை நான் நம்பறதா வேணாமான்றது இல்லை.
ஆனால் அலட்சியம் பண்ண மாட்டேன்…“ என்கிறான் ரமேஷ். ராமசாமியைப் பார்க்கிறான். “அதாவது
மகா… நீ வர்றேன்றியே… அந்த எதிர்காலத்தில்… இல்லை. அப்பிடியா?“
“ஆமாம்.“
“அவளோட சாவு உனக்குத் தெரியும்.“
“ஆஸ்பத்திரியில் போஸ்ட் மார்ட்டம்னு…
அவளைக் கூறு போட்டு…“ என அவன் குலுங்கிக் குலுங்கி அழுகிறான்.
“ஆ“ என நெஞ்சைப் பிடித்துக் கொள்கிறான்
ரமேஷ். “என்னாலயே கற்பனை பண்ணிப் பார்க்க முடியல.“
“நான் அனுபவிச்சிருக்கேன்…“
“வேணாம்“ என்கிறான் ரமேஷ். “போதும்.“
என்கிறான். “தெரியாத்தனமா உன்கிட்ட இதைக் கேட்டுட்டேன்டா…“ என்கிறான்.
“இதை யார் கிட்டயும் மூச்சு விடக்
கூடாது“ என்கிறான் ராமசாமி.
“இதை எப்பிடி யார் கிட்ட நான் போய்ச்
சொல்றது?“
“சரி. போய்ச் சாப்பிடு. போ“ என்கிறான்
ராமசாமி. “இன்னிக்கு இதுக்குமேல எனக்குச் சாப்பாடு இறங்காதுடா.“
“சாரி“ என்று அவனை வெளியே கூட்டிப்
போகிறான் ராமசாமி.
•
“DO YOU WANT TO SMOKE?“
“இல்ல வேணாம்…“ என்கிறான் ரமேஷ்.
“இப்படி வேற வேற காலத்து வருஷக் குழப்பத்தில் அப்படியே எல்லாம் சந்தோஷமா அமையாது…“
“எப்பிடி அமையும்?“ என்கிறான் ராமசாமி.
‘சரி. நான் சொல்றதை நீ நம்பறியா?“
“எனக்கே புரியல்ல. நம்பறதா வேணாமான்னு…“
மெல்ல நடக்கிறார்கள். அந்த மரத்தடி
சோசியன் “வாங்க சார். உங்க எதிர்காலத்தைத் தெரிஞ்சிக்கங்க…“
“அதைத் தெரிஞ்சிக்கர்றதுல தான் குழப்பமே“
என்கிறான் ரமேஷ்.
“அது எப்பிடி சார்?“ என்கிறான் சோசியன்.
“எப்பவுமே ரமேஷ். இறந்த காலத்தையும்
விட்டுறணும். எதிர்காலத்தையும் கவலைப் படக் கூடாது. நிகழ் காலத்தில் அன்னன்னிக்குப்
பாடு ஓடுதா? அத்தோட வாழறது நல்லது…“
“முடியல்லியேடா“ என்கிறான் ரமேஷ்.
“எத்தனை பெரிய குண்டைப் போட்டுட்டே…“
“இன்னிக்கு பாரு. எனக்கு ஒரு நல்ல
சேதி. இன்னொண்ணு இப்பிடி யோசனை… நான் என்ன பண்றது ரமேஷ்.“
•
ராமசாமி மனதில் அந்தக் காட்சி… கடைசி
வண்டிக்காரன் வெளியே இறங்கி ஓடுகிறான். என்னாச்சி? என்னாச்சி? என்னாச்சி?... என்ற குரல்கள்.
இறங்கி ஓடியவன் சட்டென திரும்ப வந்து
முன் மடிந்து, உவ்வே, என வாந்தி எடுக்கிறான்…
“அந்தத் தகவலே பாங்க்குக்கு தான்டா
வந்தது… நான்தான் அந்த போனை எடுத்தேன்…“
“வேணாம்… போதும்“ என்கிறான் ரமேஷ்
நெஞ்சைப் பிடித்துக் கொண்டு.
“இதுக்குதான் நான் இதெல்லாம் உனக்குத்
தெரிய வேண்டாம்னு இருந்தேன். நீ கேட்கல்ல“ என்கிறான் ராமசாமி.
“மேனஜேர் தேடப் போறார்“ என்கிறான்
ரமேஷ். திரும்பி நடக்கிறார்கள்.
அத்தியாயம் 23
ராமசாமி வீட்டுக்கு வருகிறான். அதித
சோர்வாய் இருக்கிறது. கதவைத் தட்டியதும் உற்சாகமாய் கோகுல் வந்து கதவைத் திறக்கிறான்.
அவன் தாமதம் இல்லாமல் வீடு திரும்பியதில் திலகாவுக்குத் திருப்தி. “நீங்க எப்ப வருவீங்க
வருவீங்கன்னு கோகுல் என்னைத் துளைச்செடுத்துட்டான்.“
“ம்“ என்கிறான் ராமசாமி சுரத்து இல்லாமல்.
“அப்பா நான் பிரைஸ் வாங்கியிருக்கேன்…“ உள்ளேயிருந்து ஒரு பொம்மையைக் கொண்டு வருகிறான்
கோகுல். “சூப்பர்டா…“ என அதை வாங்கி ஆச்சர்யம் போலப் பார்த்து விட்டு கோகுலின் நெற்றியில்
ஒரு முத்தம் கொடுத்து பொம்மையைத் திருப்பித் தருகிறான் ராமசாமி. அதை வாங்கிக் கொண்டு
வாசலுக்கு ஒடுகிறான் கோகுல்.
“எதுக்கு பிரைஸ்னு கேட்க மாட்டீங்களா?“
என்கிறாள் திலகா ஏமாற்றத்துடன். அவன் முகத்தைப் பார்த்து விட்டு, “போயி காஃபி கொண்டு
வரேன். அப்பதான் இவருக்கு முகத்தில் களையே திரும்ப வரும்…“ அவனைப் பார்த்து உற்சாகப்
படுத்தும் அளவில் சிரிக்கிறாள். “I KNOW YOU MAN…“ என உள்ளே போகிறாள்.
“இன்னிக்கு கோகுல் பள்ளிக் கூடத்தில்
மாறு வேஷப் போட்டி அத்தான். நானும் போயிருந்தேன்…“ என்றபடியே சிகாமணி வந்து சோபாவில்
அமர்கிறான்.
“வெரி குட்.“
“என்ன பிரைஸ் எப்பிடி பண்ணினான் எதுவும்
கேட்க மாட்டீங்களா?“ என உள்ளே யிருந்து உற்சாகமாய்ப் பேசுகிறாள் திலகா.
“ஒரே வேடிக்கை அத்தான்…“ என்று சிரிப்பை
அடக்க முடியாமல் சிகாமணி தொடர்கிறான். “என்னாச்சி… ஒரு பையன். சங்கராச்சாரியார் வேஷம்…“
என்று சிரிக்கிறான் சிகாமணி.
“அதுல என்னடா சிரிப்பு?“
“சங்கராச்சாரியார் கதை என்ன? பெத்த
அம்மா… சங்கரா என்னை விட்டுட்டு சந்நியாசம் வாங்கப் போகாதே… அப்டின்னு கெஞ்சுவா. ஆனால்
சங்கரர் அப்படியே குருவோட கிளம்பிருவார்…“
“ஆமாம்.“
“மாறுவேஷப் போட்டில ஒரு பையன். சங்கராச்சாரியார்
வேஷம்… அம்மா அவனை ஸ்டேஜுக்குப் பிடிச்சித் தள்ளித் தள்ளி விடறா… இவன் அம்மான்னு திரும்பத்
திரும்ப அவளைப் பார்க்க ஓடி வர்றான்.“
ராமசாமி புன்னகை செய்கிறான். “இது
மாதிரி காமெடி நீ எழுத மாட்டேங்கறியே சிகா…“ என்கிறான். “ஒரு மாடல் லேர்ந்து வேற ஜோக்கை
உற்பத்தி செய்யத் தெரியணும்டா. ஒண்ணு சொல்றேன் பாரு… எல்லா டிபார்ட்மென்ட்லயும் வேலை
செஞ்சால் காசு. ஒரு டிபாரட்மென்ட்ல மட்டும் அவன் வேலை செய்யலைன்னா சம்பளம். நல்ல பாராட்டு
கிடைக்கும்… அது என்ன வேலை?“
“ஆகா…“ என யோசிக்கிறான் சிகாமணி.
“புதுசா இருக்கு அத்தான்.“
“மினசார வாரியத்தில் வேலை. கரன்ட்
கட் ஆனால் தான் அவர்களுக்கு வேலை வரும். கட் ஆகலைன்னால்? வேலை செய்யாமலேயே சம்பளம்.
அதுக்கு நாம எல்லாரும் அவங்களைப் பாராட்டுவோம்…“
“இது மாதிரி ஒண்ணு நான் கேள்விப்
பட்டிருக்கேன் அத்தான். “ZOO ல எத்னையோ மிருகங்கள். நாம அதைக் கூண்டுக்கு உள்ளே போட்டுட்டு
வெளியே பாதுகாப்பா இருப்போம். ஆனால் கொசு? அதுக்கு பயந்து நாம கூண்டு, அதாவது வலைககுள்ள
ஒளிஞ்சிக்கறோம்பாங்க.“
“ரைட் இதுல சூப்பர் எது தெரியுமா
சிகா?“
“சொல்லுங்க சொல்லுங்க…“
“எல்லா வியாபாரமும் வாசல்ல வரும்போது,
வந்தவன் கிலோ அஞ்சு ரூபாய் சொனனால் நாம நாலு ரூபாய்னு கேப்போம். ஒரு வியாபாரம் தான்
இதுக்கு விதி விலக்கு. அதாவது அவன் ஐந்து ரூபாய் சொன்னால், நாம ஆறு ரூபாய்னு பேரம்
பேசுவோம்… அது என்ன வியாபாரம்?“
“ஹ்ம்…“ என வியக்கிறான் சிகாமணி.
அவன் யோசிக்கையிலேயே ராமசாமி பதில்
சொல்கிறான். “பழைய பேப்பர் வியாபாரம்.“
“சூப்பரா இருக்கு அத்தான்.“
“நம்ம கோகுல்… அவன் பண்ணின கூத்தைக்
கேக்கல்லியே“ என்றபடி உள்ளே யிருந்து வருகிறாள் திலகா. “இவனுக்கு பாரதியார் வேஷம்.“
காபியை அவனிடம் தருகிறாள். “சூடு போதுமா பாருங்க.“
“போதும். இந்த மாதிரி குறிப்பறிஞ்சி
நீ கொண்டு வந்ததே இதம்மா இருக்கு திலக்…“
“என்னாச்சி? DO YOU FEEL DULL?“ என்று
கேட்கிறாள் திலகா.
“A BIT…“ என்கிறான். “அது பரவால்ல.
நீங்க ரெண்டு பேரும், கோகுல் உட்பட உற்சாகமா இருக்கீங்க… அது நல்ல விஷயம். சொல்லு.
என்னவோ சொல்ல வந்தியே.“
“ம். கோகுலுக்கு பாரதியார் வேஷம்
போட்டு விட்டேன்.“
“பாரதியாரா? ஏது டிரஸ்? வாடகைக்கு
எடுத்தியா?“
“குடுகுடுப்பைக்காரனுக்கும் பாரதிக்கும்
ஒரே கோட் தான். ஒரே கடைதான்… இன்னோரு பையன் அத்தான்…. அதே மாதிரி கோட் போட்டுக்கிட்டு
நல்ல காலம் பொறக்குது… நல்ல காலம் பொறக்குதுன்னு வந்தான். அவனும் மீசை வெச்சிருந்தான்.
பாரதியார்னா தலைப்பாகை… அது தான் வித்தியாசம்.“
“அவன்… நல்ல காலம் பொறக்குது… இவன்?“
என்று கேட்கிறான் ராமசாமி.
“கேளுங்க வேடிக்கையை…“ என திலகா உற்சாகமாய்
ஆரம்பிக்கிறாள்.
“நானே கேட்டுக்கறேன்… கோகுல்?“ என்று
கூப்பிடுகிறான் ராமசாமி. “பக்கத்து வீட்டு ராணிக்கும், மேகலாவுக்கும் பொம்மையைக் காட்டிட்டு
வரேன்னு போயிருக்கான்…“
அதற்குள் அவனே உள்ளே வருகிறான்.
“அப்பா… கூப்பிட்டீங்களா?“
“ஆமாண்டா. இன்னிக்கு நீ மாறு வேஷப்
போட்டில என்ன பண்ணினே?“
கோகுல் கம்பீரமாய் நெஞ்சு நிமிர்த்துகிறான்.
“நாந்தான் பாரதி… அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே - என்று வானத்தை நோக்கி
கையை உயர்த்திப் பேசுகிறான்.
“சூப்பர். அம்மா சொல்லிக் குடுத்தாளா?“
“ஆமாம்ப்பா.“
“உங்க அம்மாவுக்கு தான் அச்சமே கிடையாது.“
“என்ன வேடிக்கை தெரியுமாங்க?“ என
அவன் பக்கத்தில் வந்து உட்கார்கிறாள் திலகா. “இவன் அச்சம் இல்லைன்னு ஆரம்பிச்சான் பாருங்க.
டக்னு கரண்ட் போயிட்டது. ஒரே இருட்டு… அம்மா…ன்னு பயந்து இவன் எடுத்தான் ஒரு அழுகை…“
சிகாமணியும் திலகாவும் ஒரே சமயத்தில் பெருஞ் சிரிப்பு சிரிக்கிறார்கள்.
‘கோகுல் வெட்கப்பட்டு எல்லாரையும்
பார்க்கிறான். “ச்சீ. இருட்டுன்னா எனக்கே பயம் தாண்டா… நீ வாடி குஞ்சலம்… குழந்தையைப்
போயி கிண்டல் பண்ணிக்கிட்டு…“ என கோகுலை அருகே அழைத்து அணைத்துக் கொள்கிறான் ராமசாமி.
“கோகுலுக்கு இங்க புதுசா ரெண்டு ஃப்ரெண்ட்ஸ
வந்தாச்சே? இல்லியா?“ என உற்சாகமாய்க் கேட்கிறான் ராமசாமி.
“ஆமாம்ப்பா. அந்த அக்கா ராணி… நல்லாப்
பாடறாப்பா. எனக்கும் ஒரு பாட்டு சொல்லிக் குடுத்தாப்பா…“
“எங்க பாடு?“
சேவைக் கரங்களில் பாடப்படும் பிரார்த்தனைப்
பாடலின் முதல் இரண்டு வபரிகளைப் பாடுகிறான் கோகுல். “அடி என் தங்கமே. சூப்பரா இருக்கு“
என்கிறான் ராமசாமி. “நீ வேணா அவங்க கூட போயி விளையாடிட்டு வா… போ“ என அவனை இறக்கி விடுகிறான்.
அவன் போனதும் கண்ணைத் துடைத்துக் கொள்கிறான் ராமசாமி.
“என்னாச்சி அத்தான்? வரும்போதே ஒரு
மாதிரி MOODY யா வந்தீங்க?“
ராமசாமி அவர்கள் இருவரையும் பார்க்கிறான்.
“சரி. ஒரு வழியா நீங்க என் வாழ்க்கைல நடக்கறதை யெல்லாம் நம்ப ஆரம்பிச்சிட்டீங்க…இல்லியா?“
“வேற வழி?“ என்று சிரிக்கிறாள் திலகா.
“ஆனால் அப்படியெல்லாம் நடக்கறதுக்கு ஒரு அதிர்ஷ்டம் வேணும்ங்க… ரொம்ப சுவாரஸ்யமான விஷயம்லாம்
நடக்குதுல்ல உங்க வாழ்க்கைல. நான் என்ன? துணி துவைக்க, இஸ்திரி போட, கோகுலைக் கொண்டு
விட… இவ்வளவுதான் என் வாழ்க்கை.“
“அப்பிடிச் சொல்லாதே என் கண்ணே. கண்மணியே.
கட்டிக் கரும்பே . குடும்பத்தை நீ பாத்துக்கறே. வேலைக்குப் போயி சம்பாதிக்கணும்னு நீ
வெளியே ஓடல்ல. அதுனால நான் வெளில நிம்மதியா வேலைக்குப் போயிட்டு வரேன். நீயும் ஓடி
நானும் ஒடிட்டிருந்தால் கோகுல் பாடு திண்டாடிறாதா?“
“அதெல்லாம் இல்லை. ரெண்டு பேரும்
வேலைக்குப் போய்க்கிட்டே வேற எத்தனையோ பேர் குழந்தையை வளக்கல்லியா? அதுங்கல்லாம் பாசமா
வளர்றது இல்லியா? அப்பிடியும் இருக்கத்தான் இருக்கு.“
“அப்ப என்னாகும்? நீ இதுமாதிரி அலுப்பா
வருவே. நான் உனக்கு காஃபி போட்டு எடுத்துக்கிட்டு வருவேன்…“
“ஏன் வந்தா என்ன?“ என்கிறாள் திலகா.
“இல்ல. அத்தான் என்னவோ சொல்ல வந்தார்….
சொல்லுங்க“ என்கிறான் சிகாமணி.
ராமசாமி சுதாரிக்கிறான். “சொல்றியே
தவிர. திலகா… நீ இன்னும் நான் கடந்த காலத்துக்குப் போயிட்டு வரேன்னு நம்பல…“
“எதை வெச்சிச் சொல்றீங்க?“
ராமசாமி மேசையில் அமர்ந்து கெட்டித்
தாள் ஒன்றை எடுத்து வைத்துக்கொண்டு படம் வரைய ஆரம்பிக்கிறான். “வர வர டைரி எழுதறதை
விட்டுட்டு படம் வரையறதுல இறங்கிட்டாப்ல இருக்கு நீங்க…“ என்கிறாள் திலகா.
“டைரியோ, படம் வரையறதோ… ஒரு விதமான
அவ்ட்லெட். வென்ட்டிலேஷன் தாண்டி. மனசை அதுல ஓரளவு கரைச்சிக்க முடியுது அதில். சிலாட்கள்
வாய்விட்டுப் பாடுவான். விசில் அடிப்பான்.“
“இந்த லிஃப்ட் விஷயம்… அத்தான்… எனக்கு
ஒரு சந்தேகம்…“
கை பாட்டுக்கு வரைந்து கொண்டிருக்கிறது.
“சொல்லு“ என்கிறான் ராமசாமி.
“நீங்க லிஃப்ட்ல போறீங்க.“
“ஆமாம்.“
“மைனஸ் 1 காட்டுது. அதாவது உங்களுக்கு
மட்டும்.“
“ஆமாம்.“
“அதுல போயி மைனஸ் 1 அழுத்தி இறங்கினால்…
ரெண்டு வருஷம் முந்தி உங்களை அது கொண்டு விடுது.“
திரும்பி அவனைப் பார்க்கிறான் ராமசாமி.
“சரிதான். அதுக்கு என்ன?“ என்கிறான்.
“இப்ப சப்போஸ் நீங்க லிஃப்ட்ல ஏறி,
மைனஸ் 1ம் அழுத்தி …“
“சொல்லு.“
“கரெண்ட் கடடோ… எதுவோ? லிஃப்ட் பாதில.
நிக்குது.“
“ஓகோ.“
“அப்ப நீங்க… நிகழ்காலத்தில் இருப்பீங்களா
கடந்த காலத்தில், இருப்பீங்களா?“
ராமசாமி அவனைப் பார்க்கிறான்.
“ரெண்டு வருஷம் முந்தியா அல்லது பாதி
வழி, அதுனால ஒரு வருஷம்ன்றா மாதிரிப் போயிருவீங்களா?“
“அடேய் உன் அறிவை இன்ஷ்யூர் பண்ணணும்
சிகாமணி.“ என்கிறான் ராமசாமி. “இதுவரை நடக்கல்ல. என்றாலும் கரெண்ட் கட் ஆனால் நான்
இறந்த காலத்தில் இருந்து நிகழ் காலத்துக்கு வரவே முடியாதுன்னு கூட எனக்கு பயம் உண்டுடா.“
“அது சின்ன விஷயம் அத்தான். திரும்ப
கரெண்ட் வந்தால், நீங்களும் வந்திறலாம்….“
ராமசாமி கை பாட்டுக்கு வரைந்தபடி
இருக்கிறது. திலகா அருகே வந்து அந்தப் படத்தைப் பார்த்தவள், “ஹா“ என்கிறாள்.
“ஹா இல்லடி. இது மகா. எங்க ஆபிஸ்
மகா லெட்சுமி.“
சிகாமணி வந்து அவனும் படத்தைப் பார்க்கிறான்.
“இவளை எனக்குத் தெரியும். ஞாபகம்
இருக்கு“ என்கிறான் சிகாமணி.
திலகா கேட்கிறாள். “இவளை எதுக்கு
இப்ப ஞாபகம் வந்தது உங்களுக்கு?“
“இதான் சொன்னேன் திலக். நீங்க ரெண்டு
பேருமே நான் அந்தக் காலத்துக்குப் போயிட்டு வர்றதைப் பத்தி இதுவரை நம்பாத அளவிலேயே
எடுத்துப் பேசிட்டு வரீங்க… நான்? நான் அனுபவிக்கிறேன்…“
“அப்டின்னா?“
“இந்த மகா… உனக்குத் தெரியுமே திலக்?
மகா கதை என்னாச்சி?“
“பாவம்ங்க. அவள் ஒருவிபத்தில்….“
“கரெக்ட். நீ மகாவை மறந்திட்டே. நானும்
மறந்திருந்தேன். ஆனால்…“
“ஆனால் என்னங்க?“
“தினசரி மகாவை நான் அலுவலகத்தில்
பார்க்கிறேன்…“
“ஹா“ என திலகா நெஞ்சைப் பிடித்துக்
கொள்கிறாள்.
“புரியுதுங்க. உங்க பிரச்னை…“
“என்ன புரியுது?“
“சிரிச்சி அழகா வளைய வர்றா மகா. எனக்கு
அவளைப் பழக்கம் உண்டே. அவள் ஒரு விபத்தில் சாகப் போகிறாள்னு உங்களுக்கு மட்டும் தான்
தெரியும்…“
“ஆமாம். அவளுக்குக் கூட தெரியாது
இது.“
“ஆமாங்க.“
“அவளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு
ரொம்ப வருத்தமா இருக்கு…“
சிகாமணி அவன் கையைப் பிடித்துக் கொள்கிறான்.
“பயங்கரமான சிச்சுவேஷன் அததான்.“
“இது சினிமா இல்லடா. வாழ்க்கை.“ சட்டென
முகத்தை சகஜமாக்கிக் கொள்ளப் பார்க்கிறான். “ஆனால் சில நல்ல விஷயங்களும் அதுனால நடக்குதே.
இல்லியா?“ என்கிறான் சிறு புன்னகையுடன்.
“அதான். ரமேஷ் அப்பாவின் உயில் பத்தி
உங்களால தெரிஞ்சிக்க முடிஞ்சது. அந்த கணபதி சாரோட குழந்தை கிடைச்சது…“ என்கிறான் சிகாமணி.
“முதல்ல பழைய காலத்துக்குப் போகும்
போது எனக்கு பயமா இருந்தது. அங்கியே மாட்டிக்குவேனோன்னு இருந்தது. திரும்பி வர முடிஞ்சதுன்னு
ஆயிட்டதும், அதில் ஒரு சுவாரஸ்யம் வந்தது. அப்பறம் அந்த நிகழ்ச்சிகளில் ஒரு ஈர்ப்பு
வந்தது. டைரி பார்த்து அல்லது பழைய பேப்பர் பார்த்து அந்த நாளை முன்கூட்டியே தெரிஞ்சிக்க
முடியுமான்னு பார்த்தேன்… அதெல்லாம் நல்லாதான் போயிட்டிருந்தது.“
திலகா அவனைப் பார்க்கிறாள். “நல்லதை
மாத்திரம் எடுத்துக்க முடியாதா?“
“எப்பிடி முடியும் திலக். பழைய காலம்னால்
நல்ல விஷயம் மாத்திரம் நாம சந்திக்கறதுன்றது இல்லை. எல்லா அனுபவங்களும் கிடைக்கும்…
இன்னிக்கு அப்பா பேசினார் என் கூட.“
“அப்பாவா?“
தலையாட்டுகிறான். “பயப்படாதே. பயமா
இருக்கா?- இருந்தால் வேணாம்.“
“அக்கா. அவர் சொல்றதைக் கேட்கலாம்
முதல்ல…“
“நீதானே பாரதியார் பாடல் கோகுலுக்குச்
சொல்லிக் குடுத்தே?“
“என்ன பாட்டு?“
“அச்சம் இல்லை. அச்சம் இல்லை…“
“இப்ப எனக்கே கரண்ட் போனாப்ல இருக்குங்க.“
“சரி. விட்டுறலாம்…“ என்று நகர்கிறான்
ராமசாமி. “நான் பேசலையேன்னு வருத்தப் படாதீங்க. அது போதும்.“
“இல்ல. நீங்க என்ன சொல்ல வரீங்க?
அதைச் சொல்லுங்க போதும்“ என்கிறான் சிகாமணி.
“நீங்க மைனஸ் 1 அழுத்தினால் பழைய
காலத்துக்குப் போறீங்க. அதானே விஷயம்?“ என்கிறாள் திலகா.
“ஆமாம்.“
“பேசாமல் நிகழ்காலத்திலேயே இருங்களேன்?
ஏன் மைனஸ் 1 அழுத்தணும். பழைய நிகழ்வுகளோட மல்லுக் கட்டணும்?“
“கரெக்ட்“ என்கிறான் சிகாமணி.
“அதுல சில அழகான விஷயங்கள் எனக்கு
நடந்திருக்கு. இந்த நிகழ்ச்சிகளோட சூட்சமத்தினை, பிடியை நான் எட்டிப் பிடிக்க ஆசைப்படறேன்…
இதை எப்பிடி நான் புரிஞ்சிக்கணும். இதை எப்படி சாதகமா நான் பயன்படுத்தணும்னு யோசிக்கிறேன்..
கடந்த காலத்தை நான் மாத்த நினைச்சேன். அது முடியாமல் போயிட்டது. அது முடியாதுன்னு தெரிஞ்சிக்கிட்டேன்
நான். ஆனால் அந்த அனுபவங்கள் முன்னைவிடவும் காத்திரமா எனக்குப் பதிவாகிற போது அதைப்
பயன்படுத்திக்க முடியுமான்னு நான் பார்க்கிறேன்… அந்த அளவு எனக்கு அதில் திருப்தி.
அது வேண்டியும் இருக்கு.“
“பயமா இல்லியா?“
“எதுக்கு பயப்படணும்? இது ஒரு விசேஷ
அனுபவம். அதை அப்படியே தூக்கி வெச்சிட்டு கண்ணை மூடிக்க என்னால முடியாது“ என்கிறான்.
“ஒரு விஷயம்…“
“என்ன?“ என்கிறான் சிகாமணி.
“அன்னிக்கு, எங்க கல்யாண நாள் அன்னிக்கு,
திடீர்னு என்னவோ தோணித்து… நான் பழைய காலத்தில், இங்கியே வந்தேன்…“
“எப்பிடி அத்தான்? லிஃப்ட்ல வந்தால்
நிகழ்காலத்துக்கு வந்திருவீங்களே?“
“பாயிண்ட்“ என புன்னகை செய்கிறான்
ராமசாமி. “திரும்ப வரும்போது நான் மாடியேறி வந்தேன். காலம் இடையே கட் ஆகல்ல…“
“இனட்ரஸ்டிங் அத்தான்.‘ சொல்லுங்க.“
“அன்னிக்கு எங்க அப்பாவை ரெண்டாந்
தரம் பார்த்தேன்…“ என்றபடியே சுவரைப் பார்கக்றின். அங்கே அப்பா படத்தில் மாலை போட்டிருக்கிறது.
மினுக் மினுக் என சீரியல் பல்ப். “அதெல்லாம் யாருக்கும் கிடைக்காத பெரிய அனுபவம் இல்லியா?“
“இப்ப என்ன பிரச்னை?“
“மகாவைத் தான்டி என்னால முகத்தைப்
பார்க்கவே முடியல்ல…“
“இன்னிக்கு என்ன பிரசனை? என்று கேட்கிறாள்
திலகா.
“இன்னிக்கு மகா புதுசா வண்டி டெலிவரி
எடுத்தாள்…“
“அதாவது ரெண்டு வருஷம் முந்தி.“
“அதுக்கென்ன?“ என்கிறான் சிகாமணி
புரியாமல்.
“அதுலதான் அவளுக்கு விபத்து நடந்ததுடா…“
என்றபடியே அவன் வரைநத மகா படத்தைப் பார்க்கிறான்.
“பேசாமல் சொல்றதைக் கேளுங்க. பழைய
காலத்துக்கு நீங்க போகவே வேணாம்…“ என்கிறாள் திலகா.
“சரியாத்தான் சொல்றே…“ என்கிறான்
ராமசாமி. மனசில் திடீரென்று கிருஷ்ணன் வருகிறான். புன்னகை வருகிறது. கிருஷ்ணன் “சார்
என் காதலை நீங்கதான் சார் சேர்த்து வைக்கணும்… நான் உங்களைத் தான் நம்பியிருக்கிறேன்…“
என்கிறான். “வரேன் சிருஷ்ணா“ என்று சத்தமாய்ப் பேசிவிடுகிறான் ராமசாமி.
“கிருஷ்ணனா?“
“என்னது?“ என்று திடுக்கிட்டு விழிக்கிறான்
ராமசாமி. “நான் என்ன சொன்னேன்?“
“யாரது கிருஷ்ணன்?“ என்று கேட்கிறாள்
திலகா.
“அது ஒண்ணும் இல்லை. எனக்கு பழைய
காலத்தில் சின்னச் சின்ன வேலைகள் வரும்னுதான் தோணுது…“ என்கிறான் ராமசாமி. அப்போது
கோகுல் கதவைத் திறந்து கொண்டு உற்சாகமாக உள்ளே வருகிறான். அவன் கையில் பொம்மை. உயர்த்தி
பொம்மையைப் பிடித்தபடி “அச்சம் இல்லை. அச்சம் இல்லை“ என்கிற போது சட்டென கரெண்ட் கட்
ஆகிறது. கவிகிறது இருட்டு. இருட்டிலேயே “அம்மா?“ என கோகுலின் அலறல் கேட்கிறது.
அத்தியாயம் 24
அலுவலகம் கிளம்பும் வேளை. திலகா அவன்
கன்னத்தை வருடி “உங்க மனசு சமனப்படட்டும். கேட்டீங்களா? நோ மைனஸ் 1“ என்கிறாள்.
“ஏன்?“
“இன்னுங் கொஞ்ச நாளைக்கு… சரியா?
சாயந்தரம் உற்சாகமா நீங்க வீடு திரும்பயணும்னு எதிர்பார்க்கிறேன். சரியா?“
அவன் சிரிக்கிறான். “எனக்கே இந்த
மேனேஜர் ராமகிருஷ்ணனைப் பார்த்து ரொம்ப நாள் ஆயிட்டதுன்னு இருக்குடி.“
“GOOD BOY“ என்கிறாள் அவன் மூக்கைத்
திருகி.
வீட்டுக்கு வெளியே வந்து லிஃப்ட்டை
அடைகிறான். அது சமத்தாய் மைனஸ் 1 காட்டுகிறது. சிரித்தபடி ஸீரோ அழுத்துகிறான். லிஃப்டில்
இருந்து இறங்குகிறான். வெளியே ஸ்கூட்டரை எடுக்கிறான். ஒரே உதையில் அது சொன்னபடி கிளம்புகிறது.
தெருவில் அந்த வண்டி மெக்கானிக்கைத்
தாண்டிப் போகிறது வாகனம்.
•
அலுவலகம். ரமேஷ் அவனைப் பார்த்து
உற்சாகமாகக் கையசைக்கிறான். “இரு வந்திட்டேன்…“ என்றபடி மேனேஜர் அறைக்குள் நுழைகிறான்.
நிகழ்கால மேனேஜர். ராமகிருஷ்ணன். “வாய்யா மாப்ள பார்ட்டி… நினைச்சா வேலைக்கு வரீங்க.“
“பாட்டி செத்துட்டாங்க சார்“ என்று
சிரிக்கிறான்.
“போன வாரம் தான் பாட்டி செத்தான்னு
லீவு சொன்னே?“
“எங்க தாத்தாவுக்கு ரெண்டு பெண்டாட்டி
சார்.“
“காரணம் சொல்ல ரூம் போட்டு யோசிப்பீங்களாய்யா?“
“லீவு கீவு போட்டாலும் அடுத்த நாள்
வந்து இருக்கிற மொத்த வேலையையும் முடிச்சிருவேன் சார். கவலைப் படாதீங்க…“ என்றபடி வெளியே
வருகிறான்.
வருடக் கணக்காக நடையாக நடக்கும் அந்த
லோன் பார்ட்டி வெளியே காத்திருக்கிறான். “என்ன வேணும் சார்?“
“மேனேஜரைப் பார்க்கணும்.“
“லோன் விஷயமாவா?“
“ஆமா சார்.“
“எந்த மேனேஜர் வந்தாலும் உனக்கு கதை
ஆக மாட்டேங்குதேய்யா… போய்ப் பாரு.“
“மேனேஜர் நல்ல மூடுல இருக்காரா சார்.“
“இருக்கார். அதை நீதான் போய்க் கெடுக்கப்
போறே. போ…“
அவன் உள்ளே போகிறான்.
“என்னடா? திரும்பவும் ஆபிசுக்கு ஜுட்
விட ஆரம்பிச்சிட்டே.“
“நோ கன்ஃபியூஷன். நாம வேலை பார்ப்பமா?“
என்கிறான் ராமசாமி. வெளியே டோக்கன் ஒன் செவன் ட்டூ, என டெல்லர் கவுன்ட்டரின் ஒலிப்பதிவுக்
குரல்.
பியூன் ரத்தினம் வருகிறான். “சார்.
ஆபிஸ் நினைவு வந்திட்டதாக்கும்?“
“நீ ஒருத்தன் தானப்பா கேட்காத ஆள்…
நீயும் கேட்டுட்டே. உனக்குக் கடன் குடுக்க ஆள் இல்லை. உன் கவலை உனக்கு…“ ரத்தினம் சிரிக்கிறான்.
“நிறைய செக் ரிடன் இருக்கு. கொரியர் ரிடர்ன் இருக்கு… அதெல்லாம் சார்ட் அவ்ட் பண்ணச்
சொல்லி மேனேஜர் சார் சொல்லி விட்டார்.“
பாத்திறலாம். பாத்திறலாம்….“
ரிடர்ன் ஆன செக் எல்லாம் பார்த்து
அதன் கணக்குகளை கம்பியூட்டரில் தேடுகிறான். அவர்களின் தொடர்பு எண்களை கண்டறிகிறான். செக் திரும்பி வந்த தகவல் சொல்கிறான். பரபரப்பான
வேலை. முடிந்து கையை தலைக்கு மேல் உயர்த்தி சோம்பல் முறிக்கிறான்.
மேனனேஜரின் குரல். “ஆயிட்டதாய்யா?“
“ஓ எஸ்… ராமசாமிக்கு இன்னொரு பேர்
பம்பரம் சார்.“
“அப்ப போயி… மீனரேலாசனி பாவம்… நகைக்
கடனில் திண்டாடுறா. கூட உதவி செய்யி.“
“அவசியம் சார். லீவு மட்டும் கேட்டா
குடுத்துருங்க…“
“முதல்ல அங்க போப்பா. அவங்க ஏற்கனவே
உதவி கேட்டுட்டாங்க. அரைமணியில ஆள் தர்றேன்னு சொன்னேன்…“ என்று கை காட்டுகிறார். “இல்லாட்டி
நீங்க லீவு போடறதே இல்லியாக்கும்…“ என அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டே, நகைக் கடன்
கவுன்டர் பக்கம் போகிறான்.
•
“குட் மார்னிங் சார்…“ என்று புன்னகை
செய்கிறாள் மீனலோசனி.
“சூப்பர் மார்னிங். நான் பாத்துக்கறேன்.
நீ இந்த நகைகளை சுருக்குப் பையில் போட்டு அரக்கு சீல் வைக்கிறதைப் பார்… இன்னிக்கு
என்ன இவ்ள கூட்டம்?“
“தெரியல்ல சார். என் ராசியோ என்னவோ?“
என்கிறாள் மீனலோசனி.
“பத்து மணிக்குள்ள அப்ளிகேஷன் குடுக்கறதை
நிறுத்திட்டீங்க இல்ல?“
“அதுவே இவ்வளவு சார்…“ என்கிறாள்
மீனலோசனி. “நெக்ஸ்ட்“ என கவுன்டர் உள்ளே யிருந்து அடுத்த அப்ளிகேஷனுக்குக் கையை நீட்டுகிறான்.
வேலை மும்முரமாகப் போகிறது. மணி பன்னிரெண்டரை
தாண்டுகிறது. கவுன்டர் கதவைச் சாத்தப் போகிறான்.
கவுன்டரில் எட்டிப் பார்க்கும் ஒரு
ஏழை முகம். “என்னம்மா?“
“நகை கொண்டு வந்திருக்கேன் சார்.“
“நான் கேக்கவே இல்லியேம்மா?“ என்கிறான்.
“இல்ல சார். வெச்சி… பணம் வேணும்…“
“இப்ப வந்திருக்கியே? இப்ப மணி என்ன?“
“ஒரு அவசரம் ஐயா.“
“பத்து மணிக்குள்ள வந்தா தான் நகை
வைக்கவே முடியும் அம்மா. இதுல நாங்க செய்ய எதுவும் இல்லை…“
சட்டென மடிந்து அழப் போனவள் அப்படியே
நிறுத்தி அவனைக் கும்பிடுகிறாள். “என்னம்மா என்ன இது?“ என்று அவன் பதறுகிறான்.
“ரொம்ப நெருக்கடி ஐயா.“
“அதுக்கு நாங்க என்னம்மா பண்ண முடியும்?
எங்களுக்கு ஒரு நேரம் இருக்கு இலலே? விடிய விடிய யார் வர்றாங்கன்னு வட்டிக்கடைக் காரன்
வேணா காத்திருப்பான். நாங்க காத்திருக்க முடியுமா?“
“அவன்கிட்ட வட்டி கட்ட முடியாமலேயே
என் பாதி நகை போயிட்டது ஐயா. இப்ப… ஒரு அர்ஜென்ட்…“
ராமசாமி அவளையே பார்க்கிறான்.
“என் வீட்டுக்காரருக்கு ஒரு ஆபரேஷன்.
உடனே செய்யணும்னு சொல்றாங்க… எனக்கு கையும் ஓடல்ல காலும் ஓடல்ல… இந்தாங்க…“
அவன் மறுக்கப் பார்க்கிறான். அவள்
கடகடெவென்று செயல்படுகிறாள். கையில் கொண்டு வந்த நகையை டங்கென்று கவுன்டரில் வைக்கிறாள்.,
ஒரு ஜோடி வளையல்களைக் கழற்றி வைக்கிறாள்., காது நகை. யோசிக்கிறாள். பிறகு சட்டென அப்படியே
தாலிக் கொடியையும்…
“இரும்மா. இரும்மா. என்ன பண்றே?“
“அம்பதாயிரம் கட்டச் சொல்றாங்க… இதுல
எவ்வளவு கிடைக்கும்னே தெரியல்லியே“ என்கிறாள்.
“தாலியையே கழட்டிக் குடுத்திட்டியே…“
என்கிறான் ராமசாமி.
“அவரு…“ என அவள் அழுகிறாள். “உயிருக்குப்
போராடறார். அவர் கட்டிய தாலி… இப்ப அவருக்கே அது பயன்படல்லன்னால் எனக்கு வேற எதுக்குங்க
ஐயா.“
மீனலோசனியே அவள் பேச்சைக் கேட்டுத்
திகைக்கிறாள். “என்னம்மா?“ என்று அவளைப் பார்க்கிறான் ராமசாமி. “நாம என்ன சார் பண்ண
முடியும்?“ என்கிறாள் மீனலோசனி.
கவுன்ட்டருக்கு வெளியே வருகிறான்
ராமசாமி. “அழாதம்மா. உனக்கு உதவ முடியுமா பார்க்கிறேன்…“ அவனே போய் மேனேஜரிடம் சொல்லி
பேசி அப்ளிகேஷன் வாங்கி அவனே நிரப்புகிறான். அவள் தந்த நகைகளை வரிசைப் படுத்தி பட்டியல்
போடுகிறான். திரும்ப உள்ளே போய் எடை போடுகிறான். “நாற்பத்தி மூணாயிரம். அவ்ளதாம்மா
வரும். இதுவே நாங்க வாங்கக் கூடாது…“
அவள் தலையாட்டுகிறாள். சுற்றி எல்லாரும்
வேடிக்கை பார்க்கிறதே அவளுக்கு என்னவோ போலிருக்கிறது. பணத்தை அப்படியே எண்ணக் கூட செய்யாமல்
வாங்கிக்கொண்டு புடவை முந்தானையில் முடிச்சிட்டுக் கட்டி வைத்துக் கொள்கிறாள். அவனைப்
பார்த்து “வரேன். என் தம்பி மாதிரி நீங்க. ஆபத்து சமயத்தில் உதவினீங்க. நீங்க நல்லா
யிருக்கணும்.“ கிளம்பிப் போகிறாள்.
“ரொம்பப் பெரிய மனசு சார் உங்களுக்கு…“
என்கிறாள் மீனலோசனி.
“இப்படியான அவசரத்துல உதவறது தாம்மா
வேலை. தினசரி வந்தம் லெட்ஜரை நிரப்பினோம்னு… அது இல்லை வேலை…“ என்கிறான் ராமசாமி.
•
மதிய உணவு இடைவேளை. ரமேஷ் வருகிறான்.
“எப்பிடிடா இருக்கான் உங்க அண்ணன்?“ என்று டிபன் பாக்ஸைத் திறக்கிறான் ராமசாமி.
“நீ… உனக்கு எப்பிடிடா எங்க அப்பா
உயில் எழுதிய விஷயம் தெரிஞ்சது?“ என்று பக்கத்தில் வந்து உட்கார்கிறான் ரமேஷ்.
“சில விஷயங்கள் எனக்கே தெரியாமல்
என்னை இணைச்சிக்கிட்டு நடக்குது ரமேஷ். சொன்னால் நீ நம்ப முடியாது… IN FACT நீ சொன்னால்
நானே நம்ப மாட்டேன். நல்லது நடந்தால் எடுத்துக்க வேண்டியது தானே? என்ன சொல்றே?“
“நீ திடீர்னு காணாமல் போயிர்றே. அதை
விசாரிச்சி வீட்டுக்கும் வர வேண்டாம்னுட்டே. உன் மனைவி… அவளை எப்படி சமாளிக்கறே?“
“அவ பாவம்டா. நான் வேலைக்கு வரல்லைன்னு
தெரிஞ்சி அவள் குழம்பினால், நான் அதுக்குச் சொல்ற விஷயம் கேட்டு இன்னும் குழம்பறாள்…“
“என்ன ஏதுன்னு கேட்டால் சஸ்பென்ஸ்ன்றே?“
என்கிறான் ரமேஷ்.
அது வேளை வந்தால் சொல்றேன்… இப்பசத்திக்கு
சஸ்பென்ஸ்சாகவே இருக்கட்டும். உங்க அண்ணன் கதை பேசலாம்… எப்பிடி இருக்கான் அவன்?“
“கைல சல்லிக் காசு தர மாட்டேன்னுட்டேன்.
காசு இருந்தா அடுத்த ஷணமே போயித் தண்ணி யடிச்சிட்டு வந்து வீட்ல தகாராறு பண்ண நிக்கிறான்…“‘
“அவன் பொண்டாட்டியும் பொண்ணும் என்ன
சொல்றாங்க…?“
“நான் அவங்க கிட்ட அழுத்தமாச் சொல்லிட்டேன்.
அண்ணன் பொண்ணை நல்லபடியா வளர்த்து படிக்க வெச்சி கல்யாணம் வரை பண்ணித் தருவேன். என்
பொறுப்பு அது. ஆனால் இனியும் அவன் சொல்றதுக்கெல்லாம் பயந்து பயந்து தலையாட்டினீங்கன்னா,
எனக்குக் கோபம் வரும்னுட்டேன்…“
“அது சரி. உங்க அப்பா சொத்தை அவன்
அழிச்சான். அவங்களுக்கு அதுல என்ன செஞ்சான்? எல்லாத்தையும் சீட்டாடினான். குடியில தொலைச்சான்…
“
“இவங்களும் வேற வழி இல்லாமல் அவனுக்கு
வளைஞ்சி கொடுக்க வேண்டியதாப் போச்சு…“
“இப்ப நீ நிமிர்ந்திட்டே…“
“எவ்ளவு நாள்தான் குனிய முடியும்?
அப்பா நல்ல காரியம் பண்ணினார்… முன்னாடியே அவர் மத்த சொத்தையும் இப்பிடி மாத்தி விட்டிருக்கலாம்.“
“அட அது முடியாதுடா. அவனுக்கு முன்னமேயே
இது தெரிஞ்சிருந்தால் அவரை அவன் என்ன பண்ணிருப்பானோ… அதுவே தெரியாது.“
“சரி. நடந்தது நடந்தவரை சந்தோஷம்
ராமு…“
“உனக்கு தான் ஒரு கல்யாணம் பண்ணிப்
பார்க்க ஆசைப்பட்டார் பாவம். அது… வாய்க்கல்ல.“
“பாப்பம் பாப்பம். கல்யாணத்துக்கு
முந்தி பேங்க எக்சாம் C A I I B எழுதி பாஸ்
பண்ணிட்டேன்னு வெச்சிக்கோ. நல்லா யிருக்கும். கிளாசுக்குப் போயிட்டிருக்கேன்“ என்கிறான்
ரமேஷ்.
“அதைச் செய்யி. உருப்படியான காரியம்…“
டிபன் பாக்ஸைக் கழுவுகிறான் ராமசாமி.
•
மாலை. ரமேஷும் அவனுமாய் வீடு திரும்புகிறார்கள்.
ரமேஷ் ராமசாமியின் ஸ்கூட்டரின் பின் சீட்டில் அமர்ந்திருக்கிறான்.
“நீ எங்க போறே, என்ன பண்றே… உன் கதை
எனக்குத் தெரியும் பாஸ்“ என மெதுவாக ஆரம்பிக்கிறான்.
“எனக்கே தெரியாதேடா…“ என சிரிக்கிறான்
ராமசாமி.
“நோ மோர் சஸ்பென்ஸ்“ என்கிறான் ரமேஷ்.
“அப்படியா?“ என வண்டியை நிறுத்துகிறான்
ராமசாமி. “என்ன அது சஸ்பென்ஸ? சொல்லு…“
“லிஃப்ட்.“
“லிஃப்டா?“
எனக்குத் தெரியும்டா.“
“அதான் எப்பிடி ரமேஷ்?“
“சிகாமணி கிட்ட கேட்டேன்.“
“ஓ“ என்கிறான் ராமசாமி. “அந்த உயில்
விஷயம்… எனக்கு அது எப்பிடித் தெரிய வந்ததுனனு பேசிருப்பே இல்லே?“
“எஸ். நோ மோர சஸ்பென்ஸ்.“
“நாட் எனி மோர்…“
“ஆனால், இந்த மாதிரி கற்பனைகளை நான்
கேள்விப்பட்டிருக்கேன் ராமு… நாட்ல எவ்வளவோ ஆச்சர்யங்கள் இருக்கு. சில பேர் செத்த பின்னால
திரும்ப உசிரோட பல மணி நேரம் கழிச்சி எழுந்து உட்கார்ந்திருக்காங்க. அவங்க எம தர்மன்,
அது இதுன்னு கதை சொல்றதும் நான் பெரியவங்க சொல்லி கேட்டிருக்கேன்…“
“ஆகா…“ என வண்டியை ஒரு ஹோட்டல் வாசலில்
நிறுத்துகிறான் ராமசாமி. “வா எதாவது சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்…“
•
உள்ளே நுழைகிறார்கள். “அதாவது… இதை
இதுவரை யாருமே நம்பல. அவங்க நம்பறா மாதிரி தலையாட்டறாங்க. ஆனால் நம்பினதாத் தெரியல.
அதை அவங்க உள் வாங்கின மாதிரியே தெரியல…“
“நான் இப்படிக் கதைகள் வாசிச்சிருக்கேன்…“
“வெரி குட். நான் இப்படி யெல்லாம் இதுவரை கேள்விப் பட்டதே கிடையாது.
சொல்லு சொல்லு…“
சர்வர் வருகிறான். “என்ன சாப்பிடறே
ரமேஷ்?“
“வேணாம். வீட்ல போயி சாப்பிடணும்.
தினசரி அண்ணி நல்ல சாப்பாடு போடறா இப்ப. அவங்க நிமிர்ந்துட்டாங்க. அண்ணனை நெளிசல் எடுக்கறது
அவங்க வேலைன்னு நான் சொல்லிட்டேன்“ என்று சிரிக்கிறான்.
“உங்க அண்ணன்… கைல காசு இருக்கற வரை
தான் அவனைச் சுத்தி ஆளுங்க நிப்பாங்க. இப்ப திடீர்னு அவனுக்கு ஆள் துணை யாருமே இல்லை.
இவன் பணத்தில் கூட உட்கார்ந்து கும்மாளம் அடிச்ச எவனுமே இவனுக்கு இப்ப செலவு பண்ணத்
தயார் இல்லை…“
சர்வர் அப்படியே நிற்கிறான். “ரெண்டு
காபி“ என்கிறான் ராமசாமி. சர்வர் போகிறான்.
“இது… என் விஷயம்… அது பத்தி உனக்கு
என்ன தோணுது?“
“நினைக்க வேடிக்கையாத்தான் இருக்குடா.“
“என்ன?“
“இப்ப பார்க்கிற சில ஆட்கள் அந்த
முந்தைய காலத்துலயும் இருப்பாங்க இல்லியா? டபுள் ஆக்ஷன் போல…“
ராமசாமி புன்னகை செய்கிறான். “ஆமாம்.
YOU GOT IT. எனக்கு ரெண்டு ரமேஷைத் தெரியும்…“
“அதேதான். நீ நினைச்சால் இப்ப சந்திக்கிற
எல்லாரையும் அப்பவும் சந்திக்கலாம்…“
“ஹா… இறந்து போன என் அப்பாவைத் திரும்பப்
பார்த்தேனே..“
“என் அப்பா செத்துப் போன அப்பறம்
அவரை நீ உயிரோட பார்த்துப் பேசியிருக்கே…“
“ம்.“
“இந்த மாதிரி அனுபவங்கள் எல்லாருக்கும்
கிடைக்காதுடா ராமு. இது ஒரு ALTERNATE REALITY. குழப்பம் இல்லாமல் இதை அனுபவிக்கணும்…“
“இதுல எல்லா நினைவுகளும் சம்பவங்களும்
நல்லதாகவே அமையும்னு இல்லை…“
“ஆமாம். இதுல எதுவும் சங்கடமான சம்பவம்
அமைஞ்சதா?“
“ஏன் இல்லாமல்?“
காபியை வாயில் ஊற்றிக் கொள்ளப் போனவன்
நிறுத்துகிறான் ரமேஷ். “என்னாச்சி?“
“நம்ம பாங்க்கின் கனவுக் கன்னி…“
“யாரு?“
“யாரு? நீயே சொல்லு…“
“ஆ… மகா. மகாதானே?“
“அவளை நான் நேரில் பார்க்கிறேன்டா…“
“நல்ல விஷயம் ஆச்சே. எனக்கே அவளை
இப்ப பார்க்கணும் போல இருக்கு.“
“ஆனால்… அவளது முடிவு… அது எனக்குத்
தெரியும் இல்லியா?“
“அட அதை மறந்துட்டு அவகூட சந்தோஷமா
சிரிச்சிப் பேசு இவனே.“
“முடியல்லயேடா.“
“நான் சொல்றேன்.. அவ கூட நீ சந்தோஷமா
முகத்தை வெச்சிக்கிட்டுப் பேசு. அந்தக் காலங்கள் திரும்பக் கிடைக்குமானால்… அது தாண்டா
கடந்த காலத்தின் அதிர்ஷ்டம்.“
“அப்டின்றே?“ என்று சிரிக்கிறான்
ராமசாமி.
“என் பெண்டாட்டி இப்பதான் காலைல…
நீங்க கடந்த காலத்துக்குப் போக வேணாம்னு அனபுக் கட்டளை இட்டாள்.“
“இதுவும் அன்புக் கட்டளை தான்…“ என்கிறான்
ரமேஷ்.
“என்ன?“
“அருமையான அனுபவம். இதை நீ விட்றக்
கூடாது.“
“சரி…“ என அவன் கையைப் பிடித்துக்
கொள்கிறான் ராமசாமி. “என்னவோ சொன்னியே?“
“என்னது?“
“ம். ALTERNATE REALITY. அது பத்திச்
சொல்லுடா…“
“நான் படிச்சதைச் சொல்றேன்… சும்மா
சுவாரஸ்யமா இருக்கும் அவ்ளதான்.“
“எப்ப சொல்றே?“
“சஸ்பென்ஸ்“ என்று சிரிக்கிறான் ரமேஷ்.
“இப்ப என் முறை… வா கிளம்பலாம்.“
“எனக்கு உன் வாழ்க்கை பொறாமையா இருக்குடா“
என்கிறான் ரமேஷ் நடந்தபடியே. ஸ்கூட்டரை உதைக்கிறான் ராமசாமி. பின்னால் ரமேஷ் அமர்கிறான்.
“இனி நடக்கிறதை யெலலாம் யார்ட்டயும் வெளிப்படையாப் பேசாதே. அது குழப்பம்தான் தரும்…“
“சரி.“
“என் அப்பா விஷயம்… நடக்கலைன்னால்
நானே இதை நம்பியிருக்க மாட்டேன்.“ அவன் முன் குனிகிறான் ரமேஷ். “நீ நினைச்சால் என்
அபபாவைப் போயிப் பார்ககலாம் இலலியா ராமு?“
“ம்.“
“அவர் எடுத்த முடிவை நான் பாராட்டினேன்னு
அவர்கிட்ட சொல்றியா?“
“இப்பதானே நாமளா எல்லார்கிட்டயும்
போயி வேண்டாததைப் பேசி குழப்ப வேணாம்னு நீ சொன்னே…“
“பாயின்ட்“ என்கிறான் ரமேஷ். வண்டி
தெருவில் ஓட ஆரம்பிக்கிறது.
அத்தியாயம் 25
ஒரு ஹோட்டல். முப்பது நாற்பது பேர்
கலந்து கொள்கிற அளவிலான கான்ஃபிரன்ஸ் ஹால். குளிரூட்டப் பட்ட இருளூட்டப் பட்ட நடைவழி
தாண்டி ராமசாமி போகிறான்.
அந்தக் கூடத்தின் கதவைத் திறக்கவும்
யாரோ துப்பாக்கியால் அவனைச் சுடுகிறார்கள். டப், என்று சத்தம். அவன் மேல் பூக்கள் சிதறுகின்றன.
உள்ளே யிருந்து எல்லாரும் கை தட்டுகிறார்கள். ராமசாமி உள்ளே நுழைகிறான்.
“வெல்கம் மிஸ்டர் முக்காலம்…“ என
வரவேற்பு. ரமேஷின் குரல் தான் அது. “ஏ பாவி இதெல்லாம் உன் ஏற்பாடு தானா?“ என்று சிரித்தபடியே
மேலே சிந்தியிருந்த மலர்களை உதறி விடுகிறான்.
“பாவிக்கு ஏ பாவின்னு இனிஷியல் தந்தவன்
நீதான்…“
“என்னடா விளையாட்டு இது?“
“இன்னிக்கு நிறைய சர்ப்ரைஸ் குடுக்கணும்னு
மகாவோட திட்டம்“ என்று சிரிக்கிறான் ரமேஷ்.
“மகாவே இந்த உலகத்துக்குப் பெரிய
சர்ப்ரைஸ். அதுக்கும் மேல சர்ப்ரைசா?“ என்கிறான் ராமசாமி.
வண்ண வண்ண பலூன்களும் காகிதத் தோரணங்களுமாக
அந்த அறை விழாக் கொண்டாட்டத்துக்கு என அமைந்திருக்கிறது.
“ஹலோ அன்க்கிள்…‘ என மகா கையாட்டுகிறாள்.
அருமையாய் பட்டுப் புடவை. தழையத் தழையக் கட்டியிருக்கிறாள். கூந்தலைக் கொண்டை போட்டு
முத்துக்கள் அதில் விரவிக் கிடக்கின்றன. இரவு நேர நட்சத்திரங்கள் போல.. உதட்டுச் சாயம்
மினுங்குகிறது. லிப்-கிளாஸ் போட்டிருக்கக் கூடும். கண்ணுக்கு மை தீட்டி காது வரை பெரிய
கண்களாட்டம் காட்டி யிருக்கிறாள்.
ரமேஷின் அருகில் ஒரு தம்பதியர் அமர்ந்திருக்கிறார்கள்.
இந்த வயதிலும் சட்டையைப் பேன்ட்டுக்குள் செருகியிருக்கிறார். முழுக்கைச் சட்டை. கூட
இருக்கும் மாமியும் நல்ல அமெரிக்கை. தலைக்கு சாயம் பூசிப் பழக்கி யிருந்ததில் இப்போது
சிறு செம்பட்டை நிறம் வந்திருந்தது.
இப்போது வாசல் கதவில், கருமையாக்கப்
பட்ட கண்ணாடி வழியே வெளியே யிருந்து யாரோ உள்ளே வரும் நிழல். ரமேஷ் தயராகிறான். கையில்
பூத் தூவும் துப்பாக்கி. மேனேஜர் கிருஷ்ணராஜ் உள்ளே நுழைய டப், சுடுகிறான். எல்லாரும்
கை தட்டுகிறார்கள். “எத்தனை நாள் ஒத்திகை பாத்திருந்தானோ இவன்…“ என்கிறார் கிருஷ்ணராஜ்.
மீண்டும் சிரிப்பு அலை மோதுகிறது.
இப்போது ராதிகா உள்ளே நுழைகிறாள்.
டப். அவளுடன் கூட இன்னொரு ஆண். சட்டென அவன் பாய்ந்து அவள் முன் மறிக்கிறான். அவன் மேல்
பூ சொரிகிறது.
“தேங்ஸ் மகேஷ்…“ என நாணுகிறாள் ராதிகா.
மகா ஓடி வருகிறாள். “நாங்க எத்தனையோ
யோசிச்சி சர்ப்ரைஸ் தர்றதா திட்டம்லாம் போட்டால், நீ தந்தே பார் சர்ப்ரைஸ்… சூப்பர்
அக்கா.“ சிரிக்கிறார்கள்.
“எல்லாரும் வந்தாச்சா?‘ என்று கேட்கிறான்
ரமேஷ். வந்திருந்த நபர்களை நோட்டம் விடுகிறான். பத்து இருபது பேர் கொண்ட சிறு நண்பர்
வட்டம். மகாவைப் பார்க்கிறான். அவள் தலையாட்டுகிறாள்.
“சர்ப்ரைஸ் நம்பர் 1“ என்கிறான் ரமேஷ்.
“நம்பர் டூ“ என்கிறான் ராமசாமி. “உள்ள நுழையறச்சயே குடுத்தீங்களே, அதான் நம்பர் ஒன்.“
“அது என் ஐடியா‘. அதை நம்பர் ஒன்
ஐடியாவா ஏத்துக் கிட்டதுக்கு தேங்ஸ்“ என்கிறான் ரமேஷ். “தோழர்களே, தோழியர்களே…“
“என்னடா யூனியன் மீட்டிங் மாதிரி…“
என்கிறார் மேனேஜர். எல்லாருக்கும் சிரிப்பு. “உங்களை எதிர்த்துத் தீர்மானம் கொண்டு
வர மாட்டேன். பயப்படாதீங்க“ என்கிறான் ரமேஷ். அதற்கும் சிரிப்பு.
“இன்னிக்கு நம்ம எல்லார்க்கும் பிடித்த
மகா என்கிற மகா லெட்சுமிக்குப் பிறந்த நாள். எங்க ஆபிஸ்ல எல்லாருமே இதை சிறப்பா எடுத்துச்
செய்யலாம்னு இருந்தப்ப தான் மகா இப்படி ஒரு ஐடியா சொன்னாள். அது என்ன ஐடியா? போகப்
போகப் பார்க்கலாம்…“
“என்னவோ சர்ப்ரைஸ்னியேடா?“ என்று
கேட்கிறான் ராமசாமி.
“அதுக்கு தான் வரேன். பிறந்த நாள்னா
மெழுகுவர்த்தியை கேக் மேல ஏற்றி உடனே அதை அணைச்சிர்றாங்க. அது ஏன் தெரியல்ல.“
“விலை வாசி தான் காரணம்… யாரோ சிக்கன
நடவடிக்கையா அதை முதல்ல பண்ணியிருக்காங்க“ என யாரோ சொல்ல சிரிப்பு.
ரமேஷ் புன்னகையுடன் தொடர்கிறான்.
“ஒருவேளை… எத்தனை வயசோ அத்தனை மெழுகுவர்த்தி
ஏத்தி அதை அணைச்சால், அதைத் தாண்டி வந்ததாக வெள்ளைக்காரன் நினைச்சிருக்கலாம்…“ என நிறுத்துகிறான்.
“ஒளியை அணைக்கிறது அல்ல. ஏற்றுவது தான் நம்ம பண்பாடு… எனவே, நம்ம மகா தனது பிறந்த நாளை
குத்துவிளக்கு ஏற்றிக் கொண்டாடுகிறாள்…“
“கரெக்ட்“ என்கிறார் மேனேஜர். “ஐ
திங்க் நாம எல்லாருமே இதை ஃபாலோ பண்ணலாம்.“
குத்து விளக்கு ஒன்று. இடுப்பு உயரம்.
பளபளவென்று பூ சூடி தயாராக இருக்கிறது. எண்ணெய் விட்டு திரி போட்டுக் காத்திருக்கிறது.
ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி அதை அவளிடம் ரமேஷ் தருகிறான். அவள் அதை வாங்கி அதன் ஒரு
முகத்தை ஏற்றுகிறாள். விளக்கின் கிட்டத்தில் அவள் மெழுகுவர்த்தியால் விளக்கை ஏற்ற அவள்
முகத்தில் பிரகாசம் பரவுகிறது. கை தட்டுகிறார்கள்.
புன்னகையுடன் அவள் அந்த மெழுகுவர்த்தியை
ரமேஷிடம் தருகிறாள். அதை ஊதி அணைக்கிறான் ரமேஷ். “நீ மட்டும் ஒளியை அணைக்கலாமா?“ என்று
ராமசாமி கேட்கிறான். அதற்கும் சிரிப்பு பரவுகிறது.
டீப்பாயில் கேக் தயாராய் இருக்கிறது.
அதில் மெழுகுவர்த்திகள் இல்லை.
ரமேஷ் தொடர்ந்து பேசுகிறான். “சர்ப்ரைஸ்
நம்பர் டூ. எங்கள் எரிசையில் இல்லாதது. நாங்களே எதிர்பாராதது. எங்களுக்கே இது சர்ப்ரைஸ்…“
என சிறிது இடைவெளி விடுகிறான். பிறகு உற்சாகக் குரலில் “வெல்கம் திரு மகேஷ்… எங்கள்
நட்பு வட்டத்தின் புது வரவு.“
இதை எதிர்பாராத மகேஷ் சட்டென எழுந்து
கொண்டு வெட்கத்துடன் நிற்கிறான். எல்லாரும் கை தட்டுகிறார்கள்.
“இந்த நண்பரை எங்களோடு இணைத்து வைத்த
பெருமைக்குரிய ராதிகா…“
ராதிகா எழுந்து வெட்கமாய்ச் சிரிக்கிறாள்.
“ராதிகா நமக்கு மகேஷை அறிமுகம் செய்கிறார்…“
என அவளை அருகே அழைக்கிறான் ரமேஷ். அவள் வெட்கத்துடன் மறுப்பாய்த் தலையாட்டுகிறாள்.
“எல்லாம் நமக்குள்ள தானே ராது? கமான்….“ எனக் கூப்பிடுகிறான் ரமேஷ்.
“அவர் மிஸ்டர் மகேஷ். சார்ட்டர்டு
அக்கவுண்டன்ட். ஃப்ரம் பெங்களுரு…“
மகேஷ் கை கூப்புகிறான்.
“ஏய் அவ்ளதானா?“
“நான் ராதிகாவைக் கல்யாணம் பண்ணிக்கப்
போற மாப்பிள்ளை“ என்கிறான் மகேஷ். “அதைச் சொலல வேணாமா நீ?“ என்று ராதிகாவைக் கிண்டல்
செய்கிறான் ரமேஷ். எல்லாரும் கை தட்டுகிறார்கள்.
“எனி வே, தேங்ஸ் டியர் ராது. இப்பிடி
ஒரு அக்கேஷேனுக்கு அவரையும் அழைச்சிட்டு வந்ததுக்கு… வந்து எங்களுக்கு அறிமுகப்… படுத்தினதுக்கு….“
“நீ படுத்தாதடா…“ என்கிறாள் ராதிகா.
“அது அவன் சுபாவம்“ என்கிறான் ராமசாமி.
“இப்போது என் முறை…“ என்கிறாள் மகா.
“நான் வேலைக்குச் சேர்ந்து ஒரு மாசத்துக்கு மேல் ஆகிறது. அப்பா அம்மாவை விட்டு நான்
மட்டும் இங்க வேலைக்குன்னு வந்திட்டேன். ஆஃப் கோர்ஸ் சென்னை, நான் காலேஜ் படிச்சது
எல்லாம் இங்கதான்…“ என நிறுத்துகிறாள்.
“சோடா கீடா வேணுமா? நிறையப் பேசிட்டாப்
போல டயர்டா ஆயிட்டே…“ என்கிறான் ரமேஷ்.
“ஸ். இரு ரமேஷ்“ என அழகாய் மூச்சு
வாங்கிக் கொள்கிறாள். “அப்பா அம்மா என்னை பிறந்த நாளைக்கு ஊருக்கு வரச் சொல்லிக் கூப்பிட்டாங்க.
நான்தான் இந்த வருஷப் பிறந்த நாளை இங்க சென்னையில் கொண்டாடணும்னு பார்த்தேன்… என் பிறந்த
நாளுக்காக… என் அப்பா, அம்மா ரெண்டு பேருமே சேலத்தில் இருந்து இங்க வந்திருக்காங்க…“
அந்த வயதான தம்பதியர் எழுந்து எல்லாருக்கும்
வணக்கம் சொல்கிறார்கள். “ஐம் ரியலி பிளெஸ்ட் வித் மை பேரன்ட்ஸ்…“ என்கிறாள் மகா.
“கேக் வெட்ட மறந்துராதே“ என்கிறான்
ரமேஷ்.
“அதற்கு முன்….‘ என்கிறான் ராமசாமி.
“ராதிகா, நீதான் நம்ம ஆபிஸ்ல எந்த ஃபங்ஷன்னாலும் பாடுவே. ஆயுத பூஜைன்னால் வெள்ளைத்
தாமரை பூவில் இருப்பாள்… பாடுவியே? இப்ப நம்ம ராதிகா பத்தி… ஒரு பாட்டு….“
“ஐயோ என்ன இது? திடீர்னு?...“ என்கிறாள்
ராதிகா.
“இவ பாடுவாள்னே எனக்குத் தெரியாது.
சொல்லவே இல்லியே?“ என்கிறான் மகேஷ்.
“கமான்…“ என்கிறான் ரமேஷ்.
“இவன் ஒருத்தன் அப்பலேர்ந்து கமான்,
கமான்றான், கிண்டி ரேஸ் கோர்ஸ் மாதிரி…“ என்கிறான் ராமசாமி.
“ச். இப்ப வேணாம்…“ என்கிறாள் ராதிகா
வெட்கத்துடன். என்றாலும் அவள் பாடுவாள் என அங்கிகரிக்கப் பட்டது குறித்து அவள் முகம்
மகிழ்ச்சியாய் இருக்கிறது.
“சரி. அப்பன்னா மகேஷைப் பத்திப் பாடறியா?“
என்று ஒரு போடு போடுகிறான் ரமேஷ். அவள் முகம் குப்பென்று சிவக்கிறது. “வேணாம் வேணாம்.
மகா பத்தியே பாடறேன்…“ என சற்று யோசிக்கிறாள்.
மகேஷ் அவள் முகத்தையே ஆவலுடன் பார்க்கிறான்.
சட்டென்று கண்ணைத் திறந்து அவள் முகம் நிறைய உணர்ச்சி ‘பா‘வத்துடன் பாட ஆரம்பிக்கிறாள்.
(SONG NO 4)
என் கூடப் பிறந்தவள், என்கிற அழகான
கருத்துடன் அவள் ஆரம்பிக்கிறாள். ரமேஷ் மௌத் ஆர்கன் கொண்டு வந்திருக்கிறான். அதை கூடவே
இசைக்கிறான். ராதிகா பாட அதை அப்படியே எடுத்து ரமேஷ் தொடர்கிறான்.
எங்கள் எல்லாருக்குமே அவள் ஒற்றை
நிலவு, என்கிறதாய் அவன் சரணம் அமைகிறது.
இப்போது எதிர்பாராமல் ரமேஷ் ஒரு காரியம்
செய்கிறான். கூட்டத்தில் அமர்ந்திருக்கும் புதிய நபர் ஒருவனை மௌத் ஆர்கன் வாசித்தபடியே
போய் சபை நடுவே இழுக்கிறான். “நீயும் பாடு… பாடு…“ என்கிறதாய் வற்புறுத்துகிறான். அவன்
வெட்கத்துடன் மகாவைப் பார்க்க அவனை மகா பாடச் சொல்லி கண்ணால் உற்சாகப் படுத்துகிறாள்.
அவன் பாடுகிறான்.
என் வானத்தில் புதிதாய் ஒரு பறவை.
கூடு தேடி வந்ததோ? குடியிருக்க வந்ததோ?.. என்பதாகப் பாடல்.
மூவருமாய்ப் பல்லவியைச் சேர்ந்து
பாடி முடிக்கிறார்கள்.
“இந்த ஃபங்ஷனுக்கே சிறப்பா இந்தப்
பாடல் முடிஞ்சதே…“ என்று ரமேஷ் சொல்ல, எல்லாரும் கை தட்டுகிறார்கள்.
“ஒரு சர்ப்ரைஸை சர்ப்ரைஸா வெச்சிக்க
முடியவில்லை…. எதிர்பாராமல் அந்த சர்ப்ரைஸ் உடைபட்டு விட்டது.“ என்று சிரிக்கிறான்
ரமேஷ். “அதை நீங்களே இந்நேரம் கண்டு பிடிச்சிருப்பீங்க….“ என நிறுத்துகிறான்.
“இப்போது மகா நமது நட்பு வட்டத்துக்குப்
புதிய நபர் ஒருவரை அறிமுகப் படுத்துவார்…“ என்கிறான் ரமேஷ்.
“திசிஸ் மிஸ்டர் ஸ்ரீநிவாஸ். எம்.பி.ஏ.
மார்க்கெட்டிங் மேனஜேர் ராம் அன்ட் ராம் என்ட்டர்பிரரைசஸ்.“
“வெல்கம் மிஸ்டர் ஸ்ரீநிவாஸ்…“ என்று பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் ஸ்ரீநிவாசுக்குக்
கை கொடுக்கிறார் மேனேஜர்.
“அவ்ளதானா?“ என்று கேலி செய்கிறான்
ராமசாமி.
“மீதியை அவள்தான் சொல்லணும்…“ என்று
சிரிக்கிறான் ஸ்ரீநிவாஸ்.
“நான் எப்பிடிச் சொல்றது?“ என நாணுகிறாள்
மகா.
“வேற யார் சொல்லணுங்கறே?“ என்று ரமேஷ்
கேட்கிறான்.
“ஏய் நீ பிறந்த நாளுக்கு எங்களை இங்க
அழைச்சதே இதுக்கு தானா?“ என்று மகாவின் அம்மா கேட்கிறாள். எல்லாரும் சிரிக்கிறார்கள்.
“இதெல்லாம் உங்களுக்கே சர்ப்ரைஸ. இல்லியா?“ என்று கேட்கிறார் மேனேஜர்.
“அப்பா?“ என்கிறாள் மகா. “என்னம்மா?“
என முன்னே வருகிறார் மகாவின் அப்பா. “நீங்களும் வாங்க அம்மா….“
கேக் வெட்ட ஆயத்தம் ஆகிறாள் மகா.
அப்போது மகாவின் அப்பா எதிர்பாராமல் ஒரு காரியம் செய்கிறார். மேசையில் ரமேஷ் விட்டுப்
போயிருந்த அந்த மலர்த் துப்பாக்கியைக் கையில் எடுத்து, ஸ்ரீநிவாசைச் சுடுகிறார். டப்.
அவன் மேல் பூக்கள் சிதறுகின்றன.
எல்லாருமாய் ஹுவென்று ஓங்கரித்துக்
கை தட்டுகிறார்கள். “நீயும் வா…“ என அவனை மேடைக்கு அழைக்கிறார் மகாவின் அப்பா.
கேக் வெட்டப் படுகிறது. பிளாஸ்டிக்
கத்தி. முதல் துண்டை வெட்டி அவள் நேரே அம்மா பக்கம் வாய் அருகே கொண்டு வருகிறாள்.
“இப்பிடி அரை மனசா காரியம் செய்யக் கூடாது…“ என்கிறாள் அம்மா.
“ஏம்மா?“
“முதல் துண்டை நீ யாருக்குக் குடுக்கணுமோ
மனசுப்படி குடுன்றா உங்க அம்மா…“ என்று அப்பா சிரிக்கிறார். அவள் முகம் வெட்கப்படுகிறது.
புன்னகையுடன் ஸ்ரீநிவாஸ் அவளையே பார்த்தபடி காத்திருக்கிறான். அவள் அவன் பக்கம் கேக்கை
நீட்டி, தன் வாயில் போட்டுக் கொள்கிறாள்.
பிறகு ரெண்டாவது துண்டை அவனுக்கு
ஊட்டி வருகிறாள்.அவன் பயந்தாப் போல அவள் கையைப் பற்றி தன் வாய்க்குள் அந்தத் துண்டை
வாங்கிக் கொள்கிறான். அவளது அப்பாவும் அம்மாவும் கை தட்டுகிறார்கள்.
“இது என்ன பிறந்த நாள் விழாவா, நிச்சயதார்த்தமா?“
என யாரோ கூட்டத்தில் இருந்து குரல் கொடுக்கிறார்கள். சிரிப்பு வெடிக்கிறது.
ஸ்ரீநிவாஸ் எதிர்பாராத காரியம் ஒன்றைச்
செய்கிறான். அப்படியே போய் மகாவின் அப்பா அம்மா பாதத்தைத் தொட்டு வணங்குகிறான். நெகிழ்ச்சியுடன்
மகாவின் அப்பா அவனை அப்படியே கட்டித் தூக்கிக் கொள்கிறார்.
ரமேஷ் மகாவின் அருகே வந்து, “சென்னை
எனக்கு ஒண்ணும் புதுசு இல்லைன்னு நீ சொன்னியே, அப்பவே இதை நான் எதிர்பார்த்தேன்…“ என்று
சிரிக்கிறான்.
“எதை?“
“ஸ்ரீநிவாஸ் மாதிரி ஒரு அறிமுகத்தை.“
மகா அழகாய் வெட்கப் படுகிறாள். “இந்தா“
என அவளிடம் மலர்த் துப்பாக்கியைத் தருகிறான் ரமேஷ். “ஷுட்.“
மகா சுடுகிறாள். ஸ்ரீநிவாஸ் மேலே
மலர்கள் தூவப் படுகின்றன.
“மன்மதன் அம்பு“ என்கிறான் ராமசாமி.
மகேஷ் வந்து ஸ்ரீநிவாசுக்குக் கை
கொடுக்கிறான். “கங்கிராட்ஸ்“ என்கிறான்.
“உங்களுக்கும் வாழ்த்துக்கள்“ என
சிரிக்கிறான் ஸ்ரீநிவாஸ். “வாய் ஓயாமல் இவளுக்கு அக்கா புராணம் தான்…“
“இவளும் சொல்லியிருக்கா“ என்கிறான்
மகேஷ்.
ஸ்ரீநிவாஸ் தோளைப் பிடித்தபடி மகா
அப்பா கீழே இறங்குகிறார். மகாவின் அம்மா மகாவின் அலங்காரத்தை என்னவோ சரி செய்கிறாள்.
பஃபே உணவு தயாராய் இருக்கிறது.
“ஜமாய்ச்சிட்டே போ“ என்கிறார் மேனேஜர்
மகாவிடம். “IT BECOMES GRAND ONLY WITH YOU PEOPLE SIR… I AM REALLY REALLY
HONOURED.’’ என்கிறாள் மகா. அப்படியே திரும்பி அப்பாவிடம், “எங்க மேனேஜர்“ என அறிமுகம்
செய்கிறாள். “ரொம்ப ஸ்ட்ரிக்ட்“ என்கிறான் ரமேஷ். “அவர் கேட்டாராடா?“ என திரும்புகிறார்
கிருஷ்ணராஜ்.
“இந்த வருஷம் இவர் பிரியடுல தான்ப்பா
எங்க கிளைக்கு BEST PERFORMANCE AWARD வந்திருக்கு“ என்கிறாள் மகா.
“ஆமாம்“ என புன்னகை செய்கிறார் மேனேஜர்.
“அதையும் அவர் கேட்கல்லியே? சார் மகா உங்களுக்கு ஐஸ் வெக்கிறா. ஐஸ்வர்யா ராய் இவள்…
இவளை நம்பாதீங்க“ என்கிறான் ரமேஷ்.
“யாரை நம்பக் கூடாது. இவளையா ஐஸ்வர்யா
ராயையா?“ என்று கேட்கிறார் மேனேஜர்.
“ரமேஷை…“ என்கிறாள் மகா. “வாங்க சார்.
FEEL AT HOME“ என்று உணவு எடுத்துக் கொள்ள வழி நடத்துகிறாள் மகா.
ரமேஷ் சாப்பாட்டுத் தட்டுடன் ராமசாமி
பக்கம் வருகிறான். “மிஸ்டர் முக்காலம்…“
“‘பேரே வெச்சிட்டியா?“ என்கிறான்
ராமசாமி.
“உனக்கு இது எதுவும் சர்ப்ரைஸ் இல்லை.
இல்லியா?“
“இல்லை. ஆனாலும் சந்தோஷமா இருக்கு
எனக்கு… ரெண்டு தடவை இந்த பார்ட்டி எனக்கு….“
“ரெண்டு மொய் வைக்கணும் நீ. படவா
ராஸ்கல்“ என்கிறான் ரமேஷ். பிறகு ஆர்வமாய் அவனைப் பார்க்கக் குனிந்து ரகசியம் போலக்
கேட்கிறான். “எனக்கு எப்படா கல்யாணம் ஆகும்?“
“தெரியல… 2016 வரை இல்ல. ஆனால்…“
“ஆனால்னா? அதைவிட நல்ல விஷயம் என்ன?“
“நீ நல்லா முயற்சி பண்ணி C A I I
B எழுதுவே…“
“பாஸ் ஆகுமா?“
“சஸ்பென்ஸ்“ என்கிறான் ராமசாமி.
“எனக்கே சஸ்பென்ஸ்தான் அது“ என்கிறான்.
அப்போது டப். மலர்த் துப்பாக்கி வெடிக்கிறது.
ரமேஷ் மேல் பூ சிதறல். ஆர்வமாய்த் திரும்புகிறான். எட்டு வயதுப் பெண். தலையில் சடை
பின்ன் முத்து சோடித்திருக்கிறது. நெத்திச் சுட்டி அழகாகக அவள் நெற்றியில் அசைகிறது.
“யாரு இந்தப் பொண்ணு?‘ என்று கேட்கிறான்
ராமசாமி.
“இது இன்னொரு சர்ப்ரைசா இருக்கே?“
என ராமு சிரிக்கிறான்.
“பன்னெண்டு பதிமூணு வருஷம் நீ காத்திருக்கணும்
போலடா…“ என ராமசாமி சிரிக்கிறான்.
storysankar@gmail.com
91 97899 87842
updated daily - visit
vasikarapoikal.blogspot.com for each episode
No comments:
Post a Comment